பொதுவாக நமது வீட்டில் சாதம் அடிபிடித்தால் அல்லது கருகிபோனால் அதை நாம் அப்படியே கொட்டிவிடுவோம். இந்நிலையில் நாம் அப்படி செய்யாமல் கருகிப்போன வாசனையை மட்டும் நீக்க முடியும்.
இதற்கு நமக்கு ஒரு வெங்காயம் போதும். வெங்காயத்தை 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தொலை நிக்க வேண்டாம். அடிபிடித்த சாதத்தில் இந்த வெங்காயத்தை 4 இடத்தில் வைத்துவிட வேண்டும். ஒரு 15 நிமிடங்கள் கழித்து பார்த்தால், வெங்காயம் அந்த கருகிப்போன வாசனையை எடுத்துவிடும்.
இந்நிலையில் இதுதொடர்பாக வீடியோ இன்ஸ்டாகிராமில் பலரால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இதை முயற்சித்து பார்த்த பலரும் இது உண்மையாக உதவுகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெங்காயத்திற்கு பதிலாக பிரட் துண்டுகளை வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அடிபிடித்த சாதத்தில் வெங்காயத்தை நீக்கிவிட்டு நாம் சாப்பிடலாம். இதுபோல கருகிப்போன அடிபாகத்தை மட்டும் நாம் நிக்கிவிட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“