கோவையில் மத நல்லிணக்க நிகழ்வு; ரமலான் நோன்பை முன்னிட்டு சகர் விருந்து - இந்துக்கள் பங்கேற்பு

கோவையில், ரமலான் நோன்பை முன்னிட்டு சகர் விருந்து வைக்கப்பட்டது. இதில், மத நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் விதமாக ஏராளமான இந்துக்களும் பங்கேற்றனர். இதில் அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

கோவையில், ரமலான் நோன்பை முன்னிட்டு சகர் விருந்து வைக்கப்பட்டது. இதில், மத நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் விதமாக ஏராளமான இந்துக்களும் பங்கேற்றனர். இதில் அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

author-image
WebDesk
New Update
Cbe Sahar

உலகம் முழுவதும் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு இஃப்தார் என்று கூறப்படும் இரவு உணவு விருந்து நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் பகுதியில், ஒற்றுமை நண்பர்கள் குழு சார்பாக சகர் விருந்து நடைபெற்றது. 

Advertisment

மாலை 6:00 மணி முதல் சிக்கன், மட்டன் பிரியாணி தயார் செய்ய ஆரம்பித்த குழுவினர், இரவு 12 மணிக்கு மேல் பரிமாற ஆரம்பித்தனர். சிக்கன் பிரியானி, மட்டன் பிரியானி உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆவிபறக்க விடிய விடிய பரிமாறினர்.

இந்நிகழ்வில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஏராளமான இந்துக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்தப் பகுதியில் ஒற்றுமை நண்பர்கள் தரப்பில் இருந்து 25-வது ஆண்டாக இந்நிகழ்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி - பி.ரஹ்மான்

Coimbatore Ramzan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: