இந்து சமூகத்தால் கொண்டாடப்படும் மிகவும் வண்ணமயமான ஹோலி பண்டிகை, நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த வண்ணங்களின் திருவிழா, நீண்ட குளிர்காலத்திற்குப் பிறகு வசந்த காலம் பூப்பதைக் குறிக்கிறது. இது இந்து நாட்காட்டியின் (பிப்ரவரி-மார்ச்) பால்குண மாதத்தில் வசந்த காலத்தின் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ஹோலி பண்டிகை மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளியைப் போலவே, ஹோலியும் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது, இது மக்கள் வெறுப்புகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை விட்டுவிட்டு புதிதாக தொடங்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். இந்த புனிதமான நாளில், மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசி, உடைந்த உறவுகளை சரிசெய்யும்போது அன்பு மலரும் என்று கூறப்படுகிறது.
ஹோலி நாளில், மக்கள் ஒன்று கூடி வண்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்கள் மற்றும் தண்ணீர் துப்பாக்கிகளுடன் விளையாடுவார்கள். மற்ற பண்டிகைகளைப் போலவே, குஜியா மற்றும் பாங் போன்ற ஸ்பெஷல் ஹோலி உணவுகளை கொடுத்து ஒருவருக்கொருவர் உபசரிப்பார்கள்.
ரங்வாலி ஹோலியின் முக்கிய கொண்டாட்டங்கள் "ஹோலிகா தஹான்" ஆகும், அங்கு மக்கள் ஹோலிகா என்ற அசுரனை வழிபடுகிறார்கள், மேலும் நெருப்பைச் சுற்றி சடங்குகளைச் செய்கிறார்கள்.
ஹோலி வரலாறு
அசுர அசுரர்களின் ஆட்சியாளரான மன்னன் ஹிரண்யகசிபு, ஒரு மனிதனாலோ அல்லது மிருகத்தாலோ, வீட்டிற்குள்ளோ அல்லது வெளியிலோ, பகலிலோ இரவிலோ, ஆயுதங்களிலோ, நிலத்திலோ, தண்ணீரிலோ, காற்றிலோ கொல்லப்பட முடியாத வரம் பெற்றான் என்று புராணக்கதை கூறுகிறது.
நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை
ஹிரண்யகசிபு அனைவரும் தன்னை வணங்க வேண்டும் என்று விரும்பினார், ஆனால் விஷ்ணுவிடம் பக்தியுடன் இருந்த தனது மகன் பிரஹலாதனை மாற்ற முடியவில்லை. இதனால் கோபமடைந்த அரசன் தன் மகனைக் கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்தத் தொடங்கினான்.
பிரஹலாதனின் அத்தை ஹோலிகா தீயினால் சுடப்படாத வரத்தைப் பெற்றிருந்தாள். அதனால் அவளுடைய மடியில் பிரஹலாதனை அமரவைத்து தீ மூட்டச் செய்தாள். தீ எரிய ஆரம்பித்ததும் ஹோலிகா எரிந்து போனாள். பிரஹலாதன் பகவான் விஷ்ணுவின் அருளால் எந்த தீங்கும் இன்றி தீயிலிருந்து மீண்டு வந்தான்.
அரக்கியான ஹோலிகா அழிந்து, பக்தனான பிரஹலாதன் காப்பாற்றப்பட்டதை மகிழ்ச்சியுடன் நினைவுகூரும் பண்டிகையே ஹோலி ஆகும்.
இதற்கிடையில், விஷ்ணு, நரசிம்ம அவதாரத்தில் தோன்றி- ராஜாவை மடியில் வைத்து, சிங்க நகங்களால் அவரைக் கொன்றார். எனவேதான் இந்நாளில் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் கொண்டாட ஹோலிகா நெருப்பு எரிக்கப்படுகிறது.
இதேபோல திருவிழாவுடன் தொடர்புடைய மற்றொரு புராணக்கதை விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான பகவான் கிருஷ்ணர் - மற்றும் அவரது மனைவி ராதையுடன் தொடர்புடையது.
இந்தியாவின் கிருஷ்ணர் வளர்ந்ததாக நம்பப்படும் ப்ராஜ் பகுதியில் – ராதா, கிருஷ்ணா இடையே உள்ள தெய்வீக அன்பின் நினைவாக, ரங் பஞ்சமி வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது.
கருமை நிறமுள்ள கிருஷ்ணா, ஒருமுறை விளையாட்டாக தன் தாயிடம் தன் நிறத்தைப் பற்றி பேசியபோது, ராதா அவனை அப்படியே விரும்புவதாகவும், அவனுடைய முகத்தையும் அவளுடைய முகத்தையும் அவள் விரும்பும் எந்த நிறத்திலும் வரையச் சொல்லலாம் என்று அவள் அவனிடம் சொன்னாள். இதற்கு ராதா சம்மதிக்க, அவள் முகத்தில் இருந்த நிறம் அவனிலும் எதிரொலித்தது. இது ராதாகிருஷ்ணன் ஒன்றாக ஆன தருணம் ஆகும்.
விருந்தாவன் மற்றும் மதுராவின் ஹோலி கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை என்றாலும், பர்சானா அதன் லத்மர் ஹோலிக்கு பிரபலமானது, இதில் பெண்கள் ஆண்களை விளையாட்டுத்தனமாக குச்சிகளால் அடிப்பர், ஹோலிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.
இந்த ஹோலியில், யார் மீதும் வண்ணம் தெறிக்கும் முன், முதலில் அவர்களுக்கு இது வசதியாக இருக்கிறதா என்று கேட்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹோலி என்பது அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்புவதாகும், ஒவ்வொருவரும் அதை அவரவர் வழியில் அனுபவிக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.