வெயில் காலத்தில் உங்க வீட்டை இயற்கையாகவும், செலவில்லாமலும் குளிர்ச்சியா வச்சுக்கணுமா? இதோ ஒரு எளிய வழி! இதுக்கு உங்களுக்குத் தேவை கொஞ்சமா ரோட்டுல கிடைக்கிற கருங்கல் மட்டும்தான். நம்ப முடியலையா? தொடர்ந்து படிங்க!
Advertisment
ஒரு பெரிய பாத்திரத்துல தண்ணி நிரப்புங்க. விருப்பப்பட்டா கொஞ்சமா கம்பர்ட் சேர்த்துக்கலாம் (இது கட்டாயமில்லை). நல்லா கலந்து விடுங்க.
உங்க வீட்ல இருக்கிற ஒரு டேபிள் அல்லது சேரை எடுத்துக்கோங்க.
Advertisment
Advertisements
அதுக்கு மேல ஒரு பாலித்தீன் கவர் அல்லது பழைய அரிசிப்பை இருந்தா விரிச்சுப் போட்டுடுங்க. இது தண்ணி கசியாம இருக்க உதவும்.
இப்போ அந்த விரிச்ச பைக்கு மேல கொஞ்சமா மணலை மெல்லிசா பரப்புங்க.
மணலுக்கு மேல நீங்க எடுத்து வச்சிருக்க கருங்கற்களை நல்லா பரப்பி விடுங்க.
கற்களுக்கு மேல தடிமனான ஒரு பெட்ஷீட்டை போர்த்திடுங்க.
கம்பர்ட் கலந்து வச்சிருந்த தண்ணிய பெட்ஷீட் மேல ஊத்துங்க. பெட்ஷீட், அதுக்கு அடியில இருக்கிற மணல், கல் எல்லாம் நல்லா ஈரமாற வரைக்கும் ஊத்துங்க.
எப்படி இது வேலை செய்யுது?
இயல்பாவே மணலும் கல்லும் வெப்பத்தையும் குளிர்ச்சியையும் ரொம்ப நேரம் தக்க வச்சுக்கும் தன்மை கொண்டது. நீங்க ஊத்துற தண்ணி சீக்கிரம் காஞ்சு போகாது. அதுமட்டுமில்லாம அந்த ஈரப்பதம் உங்க ரூமை நல்லா குளிர்ச்சியா வச்சிருக்கும்.
இதை எப்படி பயன்படுத்தணும்?
இதை உங்க வீட்டு ஃபேன் காத்து படுற மாதிரி வச்சிடுங்க. ஏசி, ஏர்கூலர் இல்லாத சமயத்துல இந்த ஈரமான பெட்ஷீட் மேல ஃபேன் காத்து படும்போது, அது நல்லா குளிர்ந்த காத்தா மாறும். நீங்க இது பக்கத்துல உட்கார்ந்தாலோ, படுத்தாலோ வெயில் உங்களை தாக்காது. உங்க வீடும் குளிர்ச்சியா இருக்கும். ஏசி போட்டா எப்படி இருக்குமோ, அதே மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும்! பெட்ஷீட்க்கு அடியில மணலும் கல்லும் இருக்கறதால ஈரப்பதம் ரொம்ப நேரம் இருக்கும். அதனால நீங்க தூங்கிட்டு இருக்கும்போது அடிக்கடி தண்ணி தெளிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
உங்களுக்கு ஈரமான பெட்ஷீட் பிடிக்கலைன்னா, டேபிள் ஃபேன் பயன்படுத்தும் போது இது இன்னும் சூப்பரா வேலை செய்யும். டேபிள் ஃபேன் இல்லன்னா சீலிங் ஃபேன்கூட யூஸ் பண்ணலாம்.
ஏசி இல்லாம, செலவே இல்லாம உங்க வீட்டைக் குளிர்ச்சியா வச்சுக்க இந்த ஐடியாவை ஒரு முறை ட்ரை பண்ணிப் பாருங்க. உங்க பணமும் மிச்சமாகும், கரண்ட் பில்லும் குறையும்! இந்த ஐடியா உங்களுக்குப் பிடிச்சிருக்கா?