அரிசி ஊறவைத்த தண்ணீரில் கொஞ்சம் இதை சேருங்க… செடி பூரா பூக்கள் பூக்கும்!

பூக்களின் காம்புகள் வலுவாக இருக்க பெருங்காயம் உதவுகிறது. இதனால் பூக்கள் எளிதில் உதிர்வது தடுக்கப்பட்டு, மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு காய்களாக மாறுவதற்கு வழிவகுக்கும்.

பூக்களின் காம்புகள் வலுவாக இருக்க பெருங்காயம் உதவுகிறது. இதனால் பூக்கள் எளிதில் உதிர்வது தடுக்கப்பட்டு, மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு காய்களாக மாறுவதற்கு வழிவகுக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Garden

Organic Garden Fertilizer

வீடுகளில் தோட்டம் அமைப்பது என்பது மனதுக்கு நிறைவு தருவது. ஆனால் செடிகளுக்கு உரம் போடுவது, பூச்சி விரட்டிகள் வாங்குவது என செலவுகள் கூடிக்கொண்டே போகிறதா? கவலை வேண்டாம்!

Advertisment

செலவே இல்லாமல் உங்கள் செடிகளை ஆரோக்கியமாகவும், பூச்சிகள் இல்லாமலும் வளர்க்க ஒரு அதிசயமான, எளிமையான தீர்வை உங்களுக்காகக் கொண்டு வந்துள்ளோம். அது வேறு எதுவுமில்லை, நம் வீடுகளில் தினசரி சமையலில் பயன்படுத்தும் பெருங்காயத்தூள்தான்!

பெருங்காயத்தின் மாயாஜாலங்கள்

பெருங்காயத்தின் காரமான வாடை, பூச்சிகளையும், எறும்புகளையும் செடிகளை அண்ட விடாது. இது ஒரு சிறந்த பூஞ்சைக் கொல்லியாகவும் செயல்பட்டு, மண்ணுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

இதில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, கால்சியம், வைட்டமின் சி, சோடியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் செடிகளில் அதிக அளவில் பூக்கள் பூக்க உதவுகின்றன. குறிப்பாக, பெண் பூக்கள் அதிகமாகப் பூப்பதற்கு பெருங்காயம் துணை புரிகிறது.

Advertisment
Advertisements

பூக்களின் காம்புகள் வலுவாக இருக்க பெருங்காயம் உதவுகிறது. இதனால் பூக்கள் எளிதில் உதிர்வது தடுக்கப்பட்டு, மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு காய்களாக மாறுவதற்கு வழிவகுக்கும்.

பெருங்காயக் கரைசலை மண்ணில் ஊற்றுவதன் மூலம், எறும்புகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் புழுக்கள் மண்ணுக்கு வராமல் தடுக்கப்படுகிறது. மேலும், இது மண்ணை இலகுவாக்கி, காற்றோட்ட வசதியை அதிகரிக்கிறது. இதனால் மண்ணில் உள்ள மண்புழுக்கள் மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.

பெருங்காயக் கரைசல் தயாரிப்பது எப்படி?

தேவையானவை:

அரிசி கழுவிய நீர் (ஒரு நாள் ஊறியது மிகவும் நல்லது)

பெருங்காயத்தூள் (ஒரு சிட்டிகை அளவு)

ஒரு பாட்டில்

செய்முறை:

அரிசி கழுவிய நீரை ஒரு பாட்டிலில் ஊற்றவும்.

அதில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூளைச் சேர்க்கவும்.

பாட்டிலை மூடி, நன்கு குலுக்கி, ஒரு நாள் முழுவதும் அப்படியே வைக்கவும். மறுநாள் பார்க்கும்போது, கரைசல் நுரைத்து பெர்மன்டேஷன் ஆகி இருக்கும். (தினமும் 2-3 முறை குலுக்கி வைப்பது நல்லது, ஏனெனில் பெருங்காயத்தூள் அடியில் தங்காமல் இருக்கும்).

செடிகளுக்குப் பயன்படுத்தும் முறை:

ஒரு நாள் கழித்து, வடிகட்டிய இந்த பெருங்காயக் கரைசலை உங்கள் செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.

மண்ணில் ஊற்ற

ஒரு பங்கு பெருங்காயக் கரைசலுடன் பத்து பங்கு தண்ணீர் கலந்து, செடிகளின் வேர்ப் பகுதியில் ஊற்றலாம். சிறிய செடிகளுக்கு ஒரு கப், பெரிய செடிகளுக்கு இரண்டு கப் வீதம் ஊற்றவும். இது மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பூச்சிகளை விரட்டும்.

ஸ்பிரேயர் மூலம் தெளிக்க

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டம்ளர் பெருங்காயக் கரைசலைக் கலந்து ஸ்பிரேயரில் ஊற்றவும். இந்த கலவையை செடிகளின் இலைகள் முழுவதும், முன் மற்றும் பின் பக்கங்களிலும் படுமாறு நன்கு தெளிக்கவும். இது பூச்சிகளை விரட்டி, பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்க உதவும். பூக்காத செடிகளுக்கும் இந்த ஸ்பிரேயரைப் பயன்படுத்தலாம்.

இந்த எளிய மற்றும் செலவில்லாத பெருங்காயக் கரைசலைப் பயன்படுத்தி, உங்கள் வீட்டுத் தோட்டத்தை செழிப்பாக்கி, கொத்து கொத்தாகப் பூக்களையும் காய்களையும் பெறுங்கள்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: