New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/14/4dB3VGLH6KOPhmj5IePp.jpg)
வெறும் 10 ரூபாய் செலவில் பாத்ரூம் டைல்ஸ் பளிச்.. சிம்பிள் டிப்ஸ்தான்!
பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள உப்புக் கறைகளை எளிமையாக நீக்குவதற்கான டிப்ஸ்களையும் மீண்டும் உப்புக் கறை படியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான டிப்ஸ்களையும் இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம். என்னதான் கிச்சன் மற்றும் பாத்ரூமை நாம் பளிச்சென மாற்ற முயற்சித்தாலும், அது நடப்பதில்லை. கிச்சன் டைல்ஸைக்கூட நாம் ஓரளவுக்கு மாற்றலாம். ஆனால், அதிகமாக தண்ணீர் பயன்படுத்தப்படும் பாத்ரூம் டைல்ஸை பளிச் என மாற்றுவது மிக கடினம். ஏனென்றால், தண்ணீரில் உள்ள உப்புக் கரை டைல்ஸில் படிந்து அழுக்காகத் தெரியும். இதை நீக்க அதிக பணம் செலவு செய்து சந்தைகளில் விற்கப்படும் சில பொருட்களை வாங்கி உபயோகிப்போம்.
ஆனால், இதனால் எந்தப் பயனும் நமக்குக் கிடைக்காது.
Advertisment
வெறும் 10 ரூபாய் செலவில் உங்கள் முழு பாத்ரூமையும் பளீரெனவும், நறுமணத்துடனும் வைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பாத்ரூமில் படிந்துள்ள உப்புக் கறைகளை எளிமையாக நீக்குவதற்கான டிப்ஸ்களையும் மீண்டும் டைல்ஸில் உப்புக் கறை படியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான டிப்ஸ்களையும் வாங்க தெரிந்துகொள்ளலாம்.
டைல்ஸில் படிந்திருக்கும் உப்புக் கறையைப் போக்க, முதலில் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கல் உப்பை எடுத்துக் கொள்ளவும். இதன் அளவு வீட்டில் படிந்துள்ள கறைகளின் அளவைப் பொறுத்து மாறுபடும். பின்னர் ஒரு எலுமிச்சைப் பழச் சாற்றைப் பிழிந்து கொள்ளவும். இதையடுத்து அதில் துணி துவைக்கப் பயன்படுத்தும் சோப்புத் தூளை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் அதில் அரை ஸ்பூன் சோடா உப்பைச் சேர்க்கவும். இதையடுத்து இந்தக் கலவையில், வினிகர் 3 ஸ்பூன் சேர்க்கவும். வினிகர் இல்லை என்றால் கவலை வேண்டாம். தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இது பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாகக் கலக்கவும். இப்போது இந்தப் பேஸ்ட்டை உப்புக் கறை படிந்திருக்கும் டைல்ஸில் பிரஷ் வைத்துக் கொஞ்சமாக எடுத்துத் தேய்க்கவும்.
கறை படிந்த டைல்ஸில் தேய்த்த பிறகு, பத்து நிமிடம் அப்படியே வைத்துவிடுங்கள். இதையடுத்து, பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் இரும்பு நாரைக்கொண்டு லேசாகத் தேய்த்தாலே போதும், எத்தனை வருடக் கரையாக இருந்தாலும் உடனடியாக நீங்கிவிடும். பாத்ரூம் கறை நீங்கிய பின்னர் நன்றாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவவும். டைல்ஸ் நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு காட்டன் துணியில் கொஞ்சமாகத் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதை டைல்ஸில் தண்ணீர் படும் இடங்களில் நன்றாகத் தடவி விட்டால் உப்புத் தண்ணீர்க் கறை மீண்டும் டைல்ஸில் படியாது. இதை, வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.