கறை படிந்த முகம் பார்க்கும் கண்ணாடி: கஷ்டப்பட்டு சுத்தம் செய்ய வேண்டியதில்லை; ஈசியா கிளீன் பண்ணலாம்!

அழுக்குக் கறை படிந்திருக்கும் கண்ணாடி நமக்கு எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். பளிச்சென இருந்தால்தான் நம் தோற்றமும் பிரகாசமாக இருக்கும். எனவே அதை அவ்வப்போது துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 5 எளிய டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

அழுக்குக் கறை படிந்திருக்கும் கண்ணாடி நமக்கு எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். பளிச்சென இருந்தால்தான் நம் தோற்றமும் பிரகாசமாக இருக்கும். எனவே அதை அவ்வப்போது துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 5 எளிய டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
glasses clean with these tips

கறை படிந்த முகம் பார்க்கும் கண்ணாடி: கஷ்டப்பட்டு சுத்தம் செய்ய வேண்டியதில்லை; ஈசியா கிளீன் பண்ணலாம்!

கண்ணாடி பார்க்கும் பழக்கம் யாருக்குதான் இருக்காது. அது வெறும் நம் முகத்தை காட்டுவது மட்டுமல்ல. நாம் யார் என்பதை அவ்வப்போது உணர வைப்பதும் கண்ணாடிகள்தான். நாம் சோர்ந்துபோனாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் கண்ணாடியில்தான் நாம் முதலில் பார்ப்போம். நம்முடைய பிரதிபளிப்பாக இருக்கும் கண்ணாடி அழுக்குக் கறை படிந்து இருந்தால் அதுவே நமக்கு எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். அது பளிச்சென இருந்தால்தான் நம் தோற்றமும் பிரகாசமாக இருக்கும். எனவே அதை அவ்வப்போது துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 
Advertisment
பல் துலக்கும் பேஸ்ட்: கண்ணாடியை நீண்ட நாள் பராமரிக்காமல் விட்டால், கருப்பு கருப்பாக புள்ளில் விழ ஆரம்பிக்கும். அவற்றை அகற்ற பல் துலக்கும் பேஸ்ட் சிறந்த பொருளாக இருக்கும். நியூஸ் பேப்பர் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் பேஸ்டில் 2 ஸ்பூன் தண்ணீர் கலந்து அதை துணி பயன்படுத்தி கண்ணாடி முழுவதும் தேயுங்கள். பின் அப்படியே 10 நிமிடங்கள் ஊற வையுங்கள். அடுத்ததாக நியூஸ் பேப்பர் கொண்டு நன்கு தேய்க்க கரும்புள்ளிகள் அகலும். இறுதியாக வெள்ளை துணி பயன்படுத்தி துடைத்துக்கொள்ளுங்கள். பின் கண்ணாடி பிரகாசிக்கும். 
வினிகர்: ஒரு ஸ்பூன் வினிகரில் 2 ஸ்பூன் தண்ணீர் கலந்து அதை கண்ணாடி முழுவதும் தேய்த்து 10 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் நியூஸ் பேப்பர் பயன்படுத்தில் நன்கு துடைக்க கறைகள் நீங்கும். கண்ணாடியும் ஜொலிக்கும்.
ஷேவிங் க்ரீம்: ஷேவிங் க்ரீமில் தண்ணீர் கொஞ்சம் கலந்து அதை கண்ணாடியில் தடவி 15 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் நியூஸ் பேப்பர் கொண்டு தேய்க்க கறை நீங்கும். அடுத்து சுத்தமான துணியைக் கொண்டு தேய்க்க கண்ணாடி புதிதுபோல் மாறி விடும்.
Advertisment
Advertisements
விபூதி: டால்கம் பவுடர் அல்லது விபூதியை பயன்படுத்தி கண்ணாடியை ஒளிரச் செய்யலாம். கறையும் நீங்கிவிடும். கண்ணாடியில்டால்கம் பவுடர் அல்லது விபூதியை தூவி சிறிது நேரம் அப்படியே விடவும். பிறகு டஸ்டர் அல்லது பேப்பர் கொண்டு அதை தொடாமல் தேய்த்தால்  கண்ணாடி பளபளப்பாக மாறுவதை காணலாம்.
எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். இப்போது அதை கண்ணாடியில் தெளித்து ஒரு ஃபைபர் டவலால் துடைக்கவும். கண்ணாடி மிளிரும்.
Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: