புளி வைத்து தேய்க்க வேண்டாம்; இப்படி செய்தால் செம்பு பாத்திரங்கள் புதுசுபோல் மாறும்!
பொதுவாக சமையலறையில் பல வகையான பாத்திரங்கள் பயன்படுத்தப்படும். இதில் ஸ்டீல், அலுமினியம், கண்ணாடி மற்றும் பித்தளை பாத்திரங்கள் அடங்கும். ஆனால், சில வீடுகளில் செம்பு பாத்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. முற்காலத்தில் பெரும்பாலும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. கிராமங்களில் இன்றும் செப்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Advertisment
செம்பு பாத்திரங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கின்றன. செம்பு பாத்திரத்தில் உணவு சாப்பிடுவதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் செம்பு பாத்திரங்களை முறையாக பராமரிக்காவிட்டால் காலப்போக்கில் கருப்பாக மாறிவிடும். ஆனால் முறையான சுத்தம் மற்றும் பராமரிப்பு இந்த பாத்திரங்களை நீண்ட காலம்புதியதாக வைத்திருக்க முடியும்.
Advertisment
Advertisements
செம்பு பாத்திரங்கள் இந்திய கலாசாரத்தின் முக்கிய அங்கமாகும். அவற்றை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பது தூய்மைக்கு மட்டுமல்ல, அவற்றின் ஆயுட்காலம் அதிகரிக்கவும் உதவுகிறது. செம்புப் பாத்திரங்களில் உள்ள கருப்பு நிறத்தை நீக்குவது சற்று கடினமான பணி தான், எனினும் சில இயற்கை வீட்டு குறிப்புகள் மூலம் இதை எளிதாக செய்யலாம்.
செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்ய எலுமிச்சை ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். ஒரு பெரிய எலுமிச்சையை எடுத்து செப்பு பாத்திரங்களில் மெதுவாகத் தேய்க்கவும். எலுமிச்சையில் உள்ள இயற்கை ஆசிட் ஆனது செம்பு பாத்திரத்தில் படிந்திருக்கும் அழுக்கு, கருமையை படிப்படியாக நீக்குகிறது. எலுமிச்சம்பழத்தை தேய்த்தவுடன் பாத்திரத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும். மேலும், உப்பு மற்றும் வினிகர் கலவையானது செம்பு பாத்திரங்களை பளபளக்க வைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கலவையானது செம்பு பாத்திரங்களின் கருமையை நீக்கி, நீண்ட காலத்திற்கு புதியதாக வைத்திருக்கும். செம்பு பாத்திரங்களை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்யலாம்.
பேக்கிங் சோடாவை செம்பு பாத்திரங்களில் தேய்த்தால் அவை புதியது போல் ஜொலிக்கும். இந்த இயற்கை முறைகள் ஆனது செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்வது மட்டுமின்றி, நீண்ட காலத்திற்கு பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. இவை இரசாயனமற்ற, பாதுகாப்பான, மலிவான, நேரத்தை மிச்சப்படுத்தும் தீர்வுகள் ஆகும்.