பச்சை மிளகாய் காம்புகளை ஊறவைத்து இப்படி யூஸ் பண்ணுங்க… எலி, கரப்பான் பூச்சிக்கு குட்பை சொல்லுங்க!

இந்த அற்புத கரைசலை தயாரிக்க உங்களுக்கு தேவையானது பச்சை மிளகாயின் காம்புகள் மற்றும் மஞ்சள் தூள் மட்டுமே. ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்த அற்புத கரைசலை தயாரிக்க உங்களுக்கு தேவையானது பச்சை மிளகாயின் காம்புகள் மற்றும் மஞ்சள் தூள் மட்டுமே. ஆச்சரியமாக இருக்கிறதா?

author-image
WebDesk
New Update
DIY pest control

DIY pest control

உங்கள் வீட்டில் பல்லிகள் மற்றும் கரப்பான்பூச்சிகளின் தொல்லை அதிகமா இருக்கா? இனி கவலையே வேண்டாம்! அதிக செலவில்லாமல், 100% இயற்கையான முறையில் இந்த தொல்லையிலிருந்து விடுபட ஒரு அசத்தலான வழி இருக்கு!

Advertisment

இந்த அற்புத கரைசலை தயாரிக்க உங்களுக்கு தேவையானது பச்சை மிளகாயின் காம்புகள் மற்றும் மஞ்சள் தூள் மட்டுமே. ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம், நாம் வழக்கமாகத் தூக்கி எறியும் பச்சை மிளகாயின் காம்புகளைக் கொண்டே இந்த பயனுள்ள பூச்சிக்கொல்லி கரைசலைத் தயாரிக்கலாம்.

Advertisment
Advertisements

முதலில், பச்சை மிளகாயின் காம்புகளைப் தனியாகப் பிரித்து எடுத்துக்கொள்ளவும். (காம்புகளுடன் மிளகாயை சேமித்தால் அவை விரைவில் அழுகிவிடும்) பிரித்தெடுத்த காம்புகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

முதலில், பச்சை மிளகாயின் காம்புகளைப் தனியாகப் பிரித்து எடுத்துக்கொள்ளவும். (காம்புகளுடன் மிளகாயை சேமித்தால் அவை விரைவில் அழுகிவிடும்) பிரித்தெடுத்த காம்புகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

மறுநாள் காலை, ஊறிய காம்புகளிலிருந்து தண்ணீரை மட்டும் தனியே பிரித்து எடுக்கவும். இந்தத் தண்ணீருடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். மஞ்சள் ஒரு சிறந்த இயற்கையான ஆன்டிபயாடிக் ஆகும். இந்தக் கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். இந்தக் கரைசல் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது.

பயன்படுத்தும் முறை:

இரவு நேரத்தில், சமையலறை சிங் பகுதியிலும், அடுப்பிற்கு அடியிலும், சாதம் அல்லது உணவுத்துகள்கள் விழும் இடங்களில், மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு அதிகம் உள்ள இடங்களில் இந்த கரைசலை ஸ்பிரே செய்யுங்கள். குறிப்பாக, கரப்பான்பூச்சிகள் இரவு நேரங்களில், ஆள் நடமாட்டம் இல்லாத போதுதான் அதிகமாக நடமாடும் என்பதால், இரவு நேரத்தில் ஸ்பிரே செய்வது மிகவும் நல்லது.

அதேபோல் பல்லிகள் அடிக்கடி வரும் சுவர்கள், ஜன்னல் ஓரங்கள், பால் மற்றும் உணவுப் பொருட்கள் வைக்கும் இடங்கள் போன்ற இடங்களில் இதை ஸ்பிரே செய்யலாம். பல்லிகள் இரவு நேரத்தில் உணவு தேடி வருவதைத் தடுக்க இது உதவும். ஆயில் பாட்டில்கள் மற்றும் ஸ்டோரேஜ் பாக்ஸ்களின் இடுக்குகளிலும் இதைத் தெளிக்கலாம்.

இதில் எந்தவிதமான இரசாயனங்களும் இல்லாததால், வீட்டில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களிலும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

இந்த எளிய, ஆனால் சக்திவாய்ந்த தீர்வைப் பயன்படுத்தி, உங்கள் வீட்டைப் பல்லிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இல்லாத சுத்தமான இடமாக மாற்றலாம்! இதை நீங்கள் முயற்சி செய்யத் தயாரா?

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: