/indian-express-tamil/media/media_files/2024/12/07/Vv9rcOTDBdK2Duyqv9I3.jpg)
முடி உதிர்வு பிரச்சனை என்பது தற்போது பலருக்கும் உள்ளது. உடல் நிலையில் மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் என பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம். எனினும், பலருக்கு பொடுகு பிரச்சனை இருப்பதால் முடி உதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. தலையில் ஏற்படும் வறட்சி தன்மை காரணமாக பொடுகு உருவாகும்.
இந்நிலையில் பொடுகு பிரச்சனை போக்குவதற்கு விலை உயர்ந்த ஷம்புக்கள், ஹேர் சீரம் போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் ஏராளம். எனினும், இரசாயனம் கலக்காமல் இயற்கையான முறையில் பொடுகு பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என தற்போது பார்க்கலாம்.
இதற்கு வேப்பிலையும், குப்பை மேனி இலைகளும் இருந்தாலே போதும். இவை இரண்டையும் ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர், இதனை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும். பின்னர், இந்த கலவையை தலையில் தேய்த்து சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் குளிக்க வேண்டும்.
பொடுகு தொல்லை அதிகமாக இருந்தால் வாரத்திற்கு இரு முறையும், பொடுகு தொல்லை குறைந்த பின்னர் வாரத்திற்கு ஒரு முறையும் இதனை பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.