காதுக்கு மேல் வெள்ளை முடி? தேங்காய் எண்ணெயுடன் இந்தக் கீரை சேருங்க: இளம் வயது நரைக்கு டாக்டர் சிவராமன் டிப்ஸ்
இளைஞர்களுக்கு நரைமுடி உருவாகும் காரணம் குறித்து பல்வேறு மருத்துவ தகவல்களை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், கரிசலாங்கண்ணி கீரை மூலம் இதனை சரி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கு நரைமுடி உருவாகும் காரணம் குறித்து பல்வேறு மருத்துவ தகவல்களை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், கரிசலாங்கண்ணி கீரை மூலம் இதனை சரி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் மட்டுமின்றி இன்றைய சூழலில் சிறுவர்களுக்கும் கூட சில நரைமுடிகள் காணப்படுகின்றன. குறிப்பாக, காதுக்கு மேல் சில நரைமுடிகள் முளைக்கத் தொடங்குகின்றன. இது போன்ற இளநரை பாதிப்பு குறித்தும், அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்றும் மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
இதனை தடுக்க பழங்கள், கீரைகள் அதிகளவில் சாப்பிட வேண்டும். குறிப்பாக, கரிசலாங்கண்ணி கீரையை அவசியம் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை, முடியில் கருமை நிறத்தை கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். கரிசலாங்கண்ணி கீரையில் இருந்து சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தலைக்கு தேய்த்துக் கொள்ளலாம் என்றும் சிவராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், கரிசலாங்கண்ணி கீரையை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். எனினும், சிலருக்கு இதனை தினசரி சாப்பிடுவது சிரமமாக இருக்கும். அவ்வாறு உணவாக எடுத்துக் கொள்ள முடியாதவர்கள், கரிசலாங்கண்ணி கீரையை பொடியாக மாற்றி, அதனை உணவுக்கு முன்பாக அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காயையும் நம் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை முடி வளர்ச்சி மட்டுமின்றி சருமம் சுருக்கம் அடைதல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது. அதன்படி, நெல்லிக்காயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை அப்படியே சாப்பிடலாம். இது தவிர நரைமுடி பாதிப்பை தடுக்க என்னவெல்லாம் செய்யக் கூடாது என்றும் மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்த காலகட்டத்தில் தலை முடியை அலங்காரம் செய்யும் போக்கு பலரிடம் காணப்படுகிறது. முன்பெல்லாம் திருமணத்தின் போது தான் முடியை அலங்கரித்துக் கொள்வார்கள். தற்போது அடிக்கடி முடி அலங்காரத்தில் பலர் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அடிக்கடி சிகை அலங்காரங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், தலை முடியை பராமரிப்பதற்கு நமது வாழ்வியலும், உணவு முறையும் மிக முக்கியமானது. உடலில் சூடு உண்டாக்கும் உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதன்படி, கோழிக்கறி, எண்ணெய்யில் பொறித்த உணவுகள், ஊறுகாய், சிப்ஸ் ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.