கைக்கு மட்டுமல்ல பாதத்திற்கும் மருதாணி போடுங்க… பித்த வெடிப்பு மறையும்; டாக்டர் வேணி
பித்த வெடிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். மேலும், இதனை வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பித்த வெடிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். மேலும், இதனை வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நாம் பெரிதும் அக்கறை காண்பிக்காத உறுப்பு என்னவென்றால், அது கால் பாதமாகத் தான் இருக்கும். அந்த வகையில் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு குறித்து பலருக்கும் புரிவதில்லை என்று மருத்துவர் வேணி கூறுகிறார்.
Advertisment
உடல் பருமன், தையிராய்ட் பிரச்சனை, சருமத்தில் வறட்சி ஆகியவை இருப்பவர்களுக்கு பித்த வெடிப்பு இருக்கும் என்று மருத்துவர் வேணி கூறுகிறார். இது தவிர மரபணு ரீதியாகவும் பாதத்தில் பித்த வெடிப்பு ஏற்படலாம்.
பித்த வெடிப்பு வராமல் தடுப்பதற்கு சருமம் வறட்சியாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அந்த வகையில், ஈரப்பதத்தை தக்க வைக்க எண்ணெய் தடவிக் கொள்ளலாம். இது தவிர, ஷூ அணியும் போது சாக்ஸும் சேர்த்து அணிய வேண்டும் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார்.
மேலும், இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக சுடுதண்ணீரில் பாதங்களை நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னர், சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்த பின்னர், பாதத்தில் சாக்ஸ் அணிந்து படுக்கலாம்.
Advertisment
Advertisements
இதேபோல், பாதங்களுக்கு மருதாணி போடுவது பித்த வெடிப்பை குறைக்க உதவும். இது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. அதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை மருதாணி போடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார்.
எனவே, இது போன்ற விஷயங்களை தொடர்ச்சியாக பின்பற்றும் போது பித்த வெடிப்பு பாதிப்பு குறையத் தொடங்கும். மேலும், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதும் பித்த வெடிப்பை குறைக்கும்.
நன்றி - Neuro Doctor Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.