முடி உதிர்வு பிரச்சனை என்பது தற்போது பலருக்கும் உள்ளது. உடல் நிலையில் மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் என பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம். எனினும், பலருக்கு பொடுகு பிரச்சனை இருப்பதால் முடி உதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொடுகு, தலை முடியில் பாதிப்பை ஏற்படுத்துவதை போன்று, முகப்பருக்களையும் உண்டாக்குகிறது.
இந்த பொடுகை எளிமையான வீட்டு வைத்திய முறையில் போக்கிவிட முடியும். அதன்படி, ஒரு கைப்பிடி அளவிற்கு கொழுந்து வேப்பிலை எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழை ஜெல்லை இத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், சின்ன வெங்காயம் 5 அல்லது 6 எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
இறுதியாக இத்துடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து தலையில் தேய்க்க வேண்டும். பின்னர், சுமார் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் பொடுகு பிரச்சனை சரியாகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“