/indian-express-tamil/media/media_files/2025/05/31/fk7oof2xWYrp4RGKmRFE.jpg)
Homemade DIY Natural hair dye
இப்போதெல்லாம் இளமையிலேயே தலைமுடி நரைப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இது பலருக்கும் ஒரு பெரிய கவலையாகவும், தன்னம்பிக்கையை குலைக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலானோர் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.
அப்படியானவர்களுக்கு, டாக்டர் நித்யா பரிந்துரைக்கும் ஒரு எளிய மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியம் இங்கே.
தேவையான பொருட்கள்
தேங்காய் சிரட்டை
வசம்பு
விளக்கெண்ணெய்
தேங்காய் எண்ணெய்
முதலில், தேங்காய் சிரட்டையையும், வசம்பையும் தனித்தனியே நன்கு சுட்டு கரியாக்கிக் கொள்ளவும்.
இந்த இரண்டு கரியையும் ஒன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து, அதில் பொடித்த கரியை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவை கருமை நிறத்தில் இருக்க வேண்டும்.
இந்த கலவையை உங்கள் தலைமுடியில், குறிப்பாக நரைத்த பகுதிகளில், ஒரே ஒரு முறை மட்டும் நன்கு அப்ளை செய்யவும். அப்ளை செய்த பிறகு, சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.
பலன்கள்
இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், நரைமுடி படிப்படியாக கருமையாக மாறுவதோடு, எதிர்காலத்தில் மீண்டும் நரைமுடி தோன்றுவதற்கான வாய்ப்புகளும் குறையும். இது ஒரு இயற்கை வைத்தியம் என்பதால், பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற பயம் தேவையில்லை, என்கிறார் டாக்டர் நித்யா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.