நம் சமையலறையில் இருக்கும் கிராம்பு, உணவு சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, நம் அன்றாட வீட்டுத் தேவைகளிலும் பல வழிகளில் கைகொடுக்கிறது. கிராம்பை இடித்து பொடியாக்கி, அதை விளக்கேற்றப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/ZpiZqRhe73vz4LcW4EvD.jpg)
ஒரு கைப்பிடி கிராம்பை இடி உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் போட்டு அரைக்கத் தேவையில்லை.
ஒரு விளக்கில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
அதனுடன் கால் டீஸ்பூன் இடித்த கிராம்பு பொடியைச் சேர்க்கவும்.
கால் டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த எண்ணெயை ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் திரி போட்டு மாலை வேளையில் விளக்கேற்றவும்.
இந்த விளக்கு, வீட்டில் நேர்மறை ஆற்றலை நிரப்புவதுடன், கொசுக்கள், பூச்சிகள் மற்றும் ஈக்கள் தொல்லையில் இருந்தும் விடுதலை தரும். கிராம்பின் நறுமணம் கொசுக்களுக்குப் பிடிக்காததால், அவை வீட்டிற்குள் நுழையாது. இது உங்கள் வீட்டில் அமைதியான, நேர்மறை சூழலை உருவாக்கும்.