வாரத்திற்கு ஒரு முறை இந்த 3 பொருட்கள் போதும்... உங்கள் முகம் பளபளப்பாகும்!
வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தக் கூடிய ஹோம்மேட் ஃபேஸ் ஸ்க்ரப்பரை எவ்வாறு தயாரிக்கலாம் என்று நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார். இவை நம் முகத்தை பொலிவாக்க பயன்படுகிறது.
வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தக் கூடிய ஹோம்மேட் ஃபேஸ் ஸ்க்ரப்பரை எவ்வாறு தயாரிக்கலாம் என்று நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார். இவை நம் முகத்தை பொலிவாக்க பயன்படுகிறது.
சரும பராமரிப்பு முறை என்பது வெறும் ஃபேஸ்பேக் பயன்படுத்தி முகத்தை கழுவுவது மட்டும் கிடையாது. இவ்வாறு ஃபேஸ்பேக் பயன்படுத்துவதால் நம் முகம் பொலிவாகும் என்பது உண்மை தான். ஆனால், இது மட்டுமே நமக்கு முழுமையான பலனை கொடுக்காது.
Advertisment
அந்த வகையில் ஃபேஸ் ஸ்க்ரப்பரை பயன்படுத்தும் போது தான், நம் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் டெட் செல்கள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கும். மேலும், ஸ்க்ரப்பரை பயன்படுத்தி அத்துடன் சேர்த்து ஃபேஸ்பேக்கை உபயோகிக்கும் போது தான் முகத்தை பொலிவாக மாற்ற முடியும்.
இதற்காக கடைகளில் ஏராளமான ஃபேஸ் ஸ்க்ரப்பர்கள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றில் இரசாயனங்கள் சேர்ந்திருப்பதால், அவை வேறு ஏதேனும் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற தயக்கம் நிறைய பேருக்கு இருக்கும்.
எனவே, வீட்டிலேயே ஃபேஸ் ஸ்க்ரப்பரை தயாரித்து வாரம் ஒரு முறை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார். இதற்கு மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும். நம் முகத்திற்கு தேவையான அளவிற்கு கடலை மாவு, மஞ்சள் மற்றும் தயிர் ஆகிய அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.
Advertisment
Advertisements
பின்னர், இந்தக் கலவையை நம் முகத்தில் தேய்த்து சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். இதையடுத்து முகத்தை கழுவி பார்த்தால், நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
நன்றி - Lavanya Selvakumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.