வேப்பிலை உடன் கற்பூரம் சேர்த்து… ஃபுளோர் கிளீனர் வீட்டிலே இப்படி ரெடி பண்ணுங்க!

பலரும் வீட்டில் தரையைத் துடைக்க கடைகளில் ஃபுளோர் கிளீனரை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், வேப்பிலை உடன் கற்பூரம் சேர்த்து வீட்டிலேயே இயற்கையான முறையில் ஃபுளோர் கிளீனர் எப்படி செய்வது என்கிற ஒரு சூப்பரான டிப்சை இங்கே தருகிறோம்.

பலரும் வீட்டில் தரையைத் துடைக்க கடைகளில் ஃபுளோர் கிளீனரை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், வேப்பிலை உடன் கற்பூரம் சேர்த்து வீட்டிலேயே இயற்கையான முறையில் ஃபுளோர் கிளீனர் எப்படி செய்வது என்கிற ஒரு சூப்பரான டிப்சை இங்கே தருகிறோம்.

author-image
WebDesk
New Update
neem

வீட்டிலேயே இயற்கையான முறையில் ஃபுளோர் கிளீனர் எப்படி செய்வது என்கிற ஒரு சூப்பரான டிப்சை புதுமை சமையல் & கிராஃப்ட்ஸ் (puthumai samayal & crafts) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர்.

பலரும் வீட்டில் தரையைத் துடைக்க கடைகளில் ஃபுளோர் கிளீனரை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், வேப்பிலை உடன் கற்பூரம் சேர்த்து வீட்டிலேயே இயற்கையான முறையில் ஃபுளோர் கிளீனர் எப்படி செய்வது என்கிற ஒரு சூப்பரான டிப்சை இங்கே தருகிறோம்.

Advertisment

வீட்டிலேயே இயற்கையான முறையில் ஃபுளோர் கிளீனர் எப்படி செய்வது என்கிற ஒரு சூப்பரான டிப்சை புதுமை சமையல் & கிராஃப்ட்ஸ் (puthumai samayal & crafts) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

வீட்டுக்கு தேவையான ஃபுளோர் கிளீனர் லிக்யூட்டை இயற்கையான முறையில் எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம். முதலில் ஒரு 4 கொத்து வேப்பிலையை காம்புடன் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சின்ன பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் வேப்பிலையைக் காம்புடன் போட்டு கொதிக்க வையுங்கள். அரை லிட்டர் தண்ணீர் 300 மி.லி அளவுக்கு வற்றும் வரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் ஆறிய பிறகு, வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

Advertisment
Advertisements

அடுத்து ஒரு அரை லிட்டர் தண்ணீர் கேன் எடுத்துக்கொள்ளுங்கள். அதில், 3 கற்பூரத்தை பொடியாக நறுக்கிப் போடுக்கள். அதனுடன் 1 பாக்கெட் ஷாம்பூவைப் போடுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் உப்பு போடுங்கள். பின்னர், வேப்பிலையைக் கொதிக்க வைத்து வடிகட்டியை தண்ணீரை ஊற்றுங்கள். பிறகு, அந்த கேனை மூடி நன்றாகக் குலுக்கி கலக்குங்கள். அவ்வளவுதான், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஃபுளோர் கிளீனர் தயார். 

அடுத்து, வீட்டைத் துடைக்கும்போது, இந்த ஃபுளோர் கிளீனரை அரை பக்கெட் தண்ணீரில் ஊற்றி கலந்து நீங்கள் வழக்கமாகத் துடைப்பதைப் போல துடைக்கலாம். வீடும் பளிச்னு இருக்கும். இதில் கற்பூரம் உள்ளதால் வீட்டில் பூச்சிகளும் இருக்காது. அதே போல, வேப்பிலை தண்ணீர் கிருமி நாசினியாகவும் இருக்கும். ஷாம்பூ வீட்டுத் தரையை பளபளப்பாகவும் காட்டும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: