/indian-express-tamil/media/media_files/2025/04/06/RgAFHoATEZjatrybg8VE.jpg)
இன்றைய சூழலில் பலரும் இளநரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், மரபியல் கோளாறு, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் இளநரை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு இளநரை ஏற்பட்டால் அதை மறைக்க ஹேர் டை பயன்படுத்தும் பழக்கம் நிறைய பேருக்கும் இருக்கும். ஆனால், அதிகப்படியான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட ஹேர் டை பயன்படுத்தும் போது அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இதற்கு வீட்டில் இருக்கும் வெங்காய தோல் மூலம் எளிமையான தீர்வை பெற முடியும்.
சுமார் ஒரு லிட்டர் தண்ணீரில் வெங்காய தோல்களை நன்றாக ஊற வைக்க வேண்டும். இதையடுத்து, இந்த வெங்காய தோல் இருக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் தேயிலை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இந்த தண்ணீரின் நிறம் கருமையாக மாறியதும் அடுப்பை ஆஃப் செய்து விடலாம். அதன் பின்னர், இந்த தண்ணீரை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும். இந்த தண்ணீரை மறுநாள் காலை நாம் குளிக்கும் போது பயன்படுத்த வேண்டும்.
அதாவது முற்றிலும் குளித்து முடித்த பின்னர், இந்த தண்ணீரை இறுதியாக தலையில் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்த பின்னர் மீண்டும் வேறு தண்ணீர் ஊற்றி அலசக் கூடாது. இப்படி செய்யும் போது தலை முடி உறுதியாக இருக்கும். இது மட்டுமின்றி இளநரை மறையத் தொடங்கும்.
எனவே, செயற்கையான ஹேர் டை பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்கள், இந்த முறையை பின்பற்றி தலை முடியை கருமையாக்கலாம்.
நன்றி - Nalini Manick Cooking Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.