/indian-express-tamil/media/media_files/2025/01/26/KqMrZMFf1aQVyBCon5MT.jpg)
தலை முடியின் வளர்ச்சியை அதிகரித்து, அதனை பளபளப்பாக மாற்ற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், இதற்காக இரசாயனங்கள் கலந்த ஹேர் ஷாம்பூ, சீரம், ஆயில் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தினால் சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படக் கூடும்.
இதை தவிர்க்கும் விதமாக நம் வீட்டிலேயே சுலபமான ஹேர்மாஸ்க் செய்து விடலாம். இதற்கு இரண்டு சிறிய வாழைப்பழங்கள், ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு ஆலிவ் ஆயில் இருந்தால் போதுமானது.
அதன்படி, வாழைப்பழம், தயிர், ஆலிவ் ஆயில் ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கிரீம் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஹேர் மாஸ்கை தலை முடி முழுவதும் தேய்த்து விட்டு, சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம்.
இந்த ஹேர்மாஸ்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இப்படி செய்வதன் மூலம் முடியின் வேர்ப்பகுதி வலுவடையும். தலை முடியும் பார்ப்பதற்கு பளபளப்பாக மாறும். மேலும், இந்த ஹேர்மாஸ்கில் இரசாயனங்கள் சேர்க்காததால் ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக் கூறுகளும் இல்லை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.