/indian-express-tamil/media/media_files/2025/05/25/4LoxHEx94Cyr0gP0dMxx.jpg)
இதற்கு முன்னர் இருந்த சூழலில் ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவரும் தலை முடிக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை கடைபிடித்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் எண்ணெய் தேய்ப்பதை பலரும் விரும்புவதில்லை.
மேலும், எண்ணெய் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா என்ற ஒரு விவாதமும் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. இது தவிர முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் இல்லாமல் உடல் சூடு தணிவதற்கும் அவசியம் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்று வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆனால், இப்போது கடைகளில் விற்கப்படும் எண்ணெய்யில் அதிகமாக இரசாயனம் இருப்பதால், இவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இரசாயனங்கள் சேர்க்காத இயற்கையான பொருட்களை வைத்து வீட்டிலேயே நம்மால் ஹேர் ஆயில் தயாரிக்க முடியும்.
இதற்காக ஒரு சில பொருட்கள் மட்டும் இருந்தால் போதும். அதன்படி, இரண்டு கைப்பிடி கரிசலாங்கண்ணி கீரை, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஆறு நெல்லிக்காய்களின் விதைகளை நீக்கி இத்துடன் சேர்த்து கால் கிளாஸ் தண்ணீர் கலந்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இனி அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரை லிட்டர் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். இந்த எண்ணெய் சூடாகும் போது முதலில் அரைத்து வைத்திருந்த கலவையை இதில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இது கருமை நிறத்திற்கு மாறியதும் அடுப்பை ஆஃப் செய்து விடலாம். இதையடுத்து, சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் இதனை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் மாற்றிக் கொள்ளலாம். இந்த எண்ணெய்யை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தலாம். இந்த ஹோம்மேட் ஹேர் ஆயில் 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். மேலும், தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்ய இந்த எண்ணெய் பயன்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.