இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது.
இந்நிலையில், வெந்தயம், கற்றாழை இன்னும் சில பொருள்களைக் கொண்டு உங்கள் முடியை எப்படி அடர்த்தியாக வளர வைக்கலாம் என தற்போது பார்க்கலாம்.
முதலில், ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்தயத்தை சாதம் வடித்த நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இத்துடன் கற்றாழையின் ஜெல்லை நன்றாக கழுவி விட்டு சேர்க்க வேண்டும். இவற்றுடன் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலைகள், தயிர், வேப்பிலை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஹேர் பேக்கை சுமார் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே தலையில் தடவி வைக்க வேண்டும். அதன் பின்னர் குளித்து விடலாம்.
இந்த ஹேர் பேக்கை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தலைக்கு பயன்படுத்தலாம். இப்படி தொடர்ச்சியாக செய்தால் இரண்டு மாதங்களில் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“