இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக வீட்டிலேயே ஹேர் பேக் செய்து பயன்படுத்தலாம்.
தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன் சாதம் வடித்த தண்ணீரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். நம் தலை முடிக்கு தேவையான அளவு தேங்காயை எடுத்துக் கொள்ளலாம். பின்னர், இதில் இருந்து தேங்காய் பாலை வடிகட்டி எடுக்க வேண்டும்.
இதையடுத்து, பச்சை பாசிபயிறை இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன், 4 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். இதை அரைத்த பின்னர், முதலில் வடிகட்டி எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த ஹேர் பேக்கை தலையில் தேய்த்த பின்னர், 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். வாரத்திற்கு இரண்டு முறை என இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக செய்தால் முடி அடர்த்தியாக வளரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“