/indian-express-tamil/media/media_files/2025/03/26/GlGPfSllLE8C3zMyg70N.jpg)
சரும பராமரிப்பு முறை என்பது ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி மாறுபடும். சிலருக்கு ஆய்லி ஸ்கின்னாக இருக்கும். சிலரது சருமம் வறட்சியாக காணப்படும். எனவே, தங்களுடைய சரும அமைப்பை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஆனால், சில விஷயங்கள் பொதுவாக பலரிடம் காணப்படும். அதாவது உடலின் ஒரு சில பகுதிகள் மட்டும் கருமை நிறத்தில் இருக்கும். உதாரணத்திற்கு சிலரது கழுத்துப் பகுதி மட்டும் இவ்வாறு காட்சியளிக்கும். இதனை போக்குவதற்கு பியூட்டி பார்லர் செல்லலாமா என்றும் சிலர் கருதுவது உண்டு.
ஆனால், எல்லோராலும் அடிக்கடி பியூட்டி பார்லருக்கு சென்று சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது. மேலும், கழுத்துப் பகுதி தானே என்று சிலர் இதை அலட்சியமாகவும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அப்படி சருமத்தை பொறுத்தவரை எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது.
அந்த வகையில், கழுத்து பகுதியில் இருக்கும் கருமையை போக்குவதற்கு வீட்டிலேயே மாஸ்க் தயாரித்துக் கொள்ளலாம். அதன்படி, ஒரு சிறிய பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு அரைத்த பீட்ரூட்டுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் ஆடை சேர்த்து கலக்க வேண்டும்.
இறுதியாக, இந்த மாஸ்கை கழுத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு செய்தால் கழுத்தில் இருக்கும் கருமை நீங்கும். மேலும், இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் கிடையாது.
நன்றி - KN SMILEY Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.