ஆரோக்கியமான சருமத்திற்கான மிக எளிதான வீட்டு வைத்தியத்தை நீங்கள் தேடுகிறீர்களா? பியூட்டி ப்ளாக்கர் வந்தனா கோஸ்வாமி’ உங்களுக்கான சரியான குறிப்பை தந்துள்ளார்.
“இந்த இரண்டு பொருட்களுடன் மென்மையான, மிருதுவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் பிக்மண்டேஷன் மற்றும் மந்தமான தன்மையை நீக்கும், ஒரு எளிய க்ரீமை நீங்களே வீட்டில் உருவாக்கலாம்!
க்ரீம் எப்படி செய்வது?
தேவையானவை
தயிர் – 1 டீஸ்பூன்
வைட்டமின் ஈ மாத்திரை – 1
செய்முறை
* ஒரு பருத்தி துணியை எடுத்து, அதை தயிரில் போட்டு, அதிகப்படியான தண்ணீரை பிழிந்து அகற்றவும்.
* வடிகட்டிய தயிரை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைக்கவும்.
8 வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்த்து, கிரீமி கன்சிஸ்டன்சி வரும் வரை நன்கு கலக்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
* உங்கள் முகத்தில் கிரீமை = மேல்நோக்கி தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யவும். உங்கள் சருமம் க்ரீமை முழுமையாக உறிஞ்சுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
தயிர் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பளபளப்பாக்கவும் உதவுகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் தோல் அமைப்பை மேம்படுத்துகிறது.
மறுபுறம், வைட்டமின் ஈ ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது.
தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு இந்த வீட்டு வைத்தியத்தை எப்போ முயற்சி செய்ய போறீங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “