இருமல், ஜலதோஷம், மூக்கடைப்பு: உடனடி நிவாரணம் பெற நெய், கற்பூரம் இப்படி பயன்படுத்துங்க

இது வாய் அல்லது பாதிக்கப்பட்ட தோல் வழியாக ரத்தத்தை அடையலாம். உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

இது வாய் அல்லது பாதிக்கப்பட்ட தோல் வழியாக ரத்தத்தை அடையலாம். உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

author-image
WebDesk
New Update
cold remedies

Cold home remedies

ஜலதோஷம், மூக்கடைப்பு மற்றும் இருமல் போன்ற பருவகால பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை. இதிலிருந்து விடுபட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வேபர் ரப் பயன்படுத்துவது உண்டு.

Advertisment

இருப்பினும், கடைகளில் ரசாயனம் கலந்த பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே ஏன் அதைச் செய்ய முயற்சிக்கக்கூடாது? இங்கு வீட்டில் வேபர் ரப் தயாரிப்பதற்கான செய்முறை உள்ளது.

தேவையான பொருட்கள்  

4-5 ஸ்பூன் நெய்
2 – பச்சை கற்பூரம்
1 - கண்ணாடி கன்டெய்னர்

Advertisment
Advertisements

செய்முறை

வீடியோவில் உள்ளபடி, அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், மிதமான தீயில் வைத்து முதலில் நெய் சேர்க்கவும். பிறகு, கற்பூரம் சேர்த்து கரைக்கவும். அடுப்பில் இருந்து கடாயை எடுத்து, இந்த வேபர் ரப்பை ஒரு கண்ணாடி கன்டெய்னரில் சேமிக்கவும். இது சிறிது நேரத்தில் கடையில் இருந்து வாங்கியது போல கட்டியாகி விடும்.

கற்பூரத்தை நெய்யில் கரைத்த பிறகு, முதலில் கேஸில் இருந்து கடாயை அகற்றிவிட்டு, பிறகு கேஸை அணைக்க வேண்டும். நெய்யை அதிக தீயில் வைக்க வேண்டாம், இல்லையெனில் அது கருகிவிடும்.

கற்பூரம் விஷமுள்ளது, இது வாய் அல்லது பாதிக்கப்பட்ட தோல் வழியாக ரத்தத்தை அடையலாம். உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. பாதுகாப்பாக இருக்க உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடுங்கள். இதை 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

முதன்முறையாக பயன்படுத்துவோர், ஒரு சிறிய பகுதியை பரிசோதித்து, ஒவ்வாமை இருக்கிறதா என்று கவனிக்கவும், என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: