/indian-express-tamil/media/media_files/2025/04/24/ZPaNIOU7delKv8jdcpC5.jpg)
முகத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க சரும பராமரிப்பு முறையை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இன்றைய பணிச்சூழலில், தினசரி சரும பராமரிப்புக்காக நேரம் ஒதுக்குவதற்கு எல்லோராலும் முடியாது.
இது தவிர ஃபேஷியல் செய்ய அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செல்ல பலருக்கு நேரம் இருப்பதில்லை. மேலும், ஃபேஸ் க்ரீம், சீரம் போன்ற பொருட்களில் இரசாயனங்கள் சேர்ந்திருப்பதால் அவை வேறு ஏதேனும் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற தயக்கமும் சிலருக்கு இருக்கும்.
அந்த வகையில் வீட்டிலேயே சிம்பிளான இரண்டு பொருட்கள் கொண்டு ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்தலாம். குறிப்பாக, ஏதாவது முக்கிய நிகழ்விற்கு செல்வதற்கு முன்னால் இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்தினால் முகம் இன்ஸ்டன்ட் பொலிவாக மாறி விடும்.
இதற்காக நம் முகத்திற்கு தேவையான அளவு தேன் மற்றும் ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். இவை இரண்டையும் மிக்ஸியில் அரைத்து பசை பதத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் சூப்பரான ஃபேஸ்பேக் ரெடியாகி விடும்.
இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடலாம். இப்படி செய்தால் நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாக காட்சியளிக்கும். மேலும், இதனை தொடர்ச்சியாக பின்பற்றினால் கூடுதல் பலன் அளிக்கும்.
இது போன்று வீட்டில் தயாரிக்கும் ஃபேஸ்பேக்குகளில் இரசாயனங்கள் சேர்க்காததால், ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியக் கூறுகளும் இருக்காது.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.