/tamil-ie/media/media_files/uploads/2021/05/hydration_water_1200.jpg)
கொரோனாவை குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் எனக் கூறி, பல கட்டுக்கதைகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
சூடான நீரில் குளிப்பது அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் கொரோனாவைத் தடுக்க முடியுமா என்று நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
இது ஒரு கட்டுக்கதை என்று இந்திய அரசாங்கம் தனது டுவிட்டர் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது. சூடான நீர் வைரஸைக் கொல்லாது அல்லது நோயைக் குணப்படுத்தாது. "கொரோனா வைரஸைக் கொல்ல ஆய்வக அமைப்பில் 60-75 டிகிரி வெப்பநிலை தேவைப்படுகிறது" என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
We are here to bust all #myths. Don't believe everything you read. Hot water bath or drinking warm water does not prevent #COVID-19.#IndiaFightsCorona#Unite2FightCorona@MIB_India@MoHFW_INDIA@PIB_India@drharshvardhanpic.twitter.com/iBPKS87XKV
— MyGovIndia (@mygovindia) May 8, 2021
உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, உங்கள் குளியல் அல்லது குளியலின் வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் உங்கள் உடல் வெப்பநிலை 36.5 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
எவ்வாறாயினும், வெதுவெதுப்பான நீரை குடிப்பது அல்லது தொண்டையை கழுவுவது தொண்டை புண்ணை ஆற்ற உதவும். ஆயுஷ் அமைச்சகம் இளஞ்சூடான தண்ணீரைக் குடிக்கவும், ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் தொண்டையை கழுவவும் பரிந்துரைத்துள்ளது.
நாசியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீராவி உள்ளிழுப்பதை முயற்சி செய்யலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதே வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.