/indian-express-tamil/media/media_files/2025/04/27/1ByG7HbGYCl5zGYuyT0K.jpg)
சுடு தண்ணியா… பச்ச தண்ணியா… குளிக்க நல்லது எது? டாக்டர் வேணி விளக்கம்
குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் நரம்புகளைத் தூண்டி, காலைப் பொழுதை தொடங்க உதவுகிறது. குளிர்ந்த நீரில் குளிப்பதும் சோம்பலை விரட்ட உதவும். குளிர்ந்த குளியல் பீட்டா-எண்டோர்பின் போன்ற மனச்சோர்வைத் தூண்டும் ரசாயனங்களை வெளியிடுகிறது. இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே, குளிர்ந்த நீரில் குளிப்பது மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் இல்லாமல் இருக்க உதவும் என்கிறார் மருத்துவர் வேணி.
குளிர்ந்த நீரில் குளிப்பது ஆண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. குளிர்ந்த நீர் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் செல்கள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் என்கிறார் மருத்துவர் வேணி.
காலையில் எழுந்ததும் பச்சைத் தண்ணீரில் குளிக்கும் போது நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. அதனால் அன்றைய நாள் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். மேலும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை குறைத்து மன அழுத்தத்தையும் குறைக்கிறது.அதனால் டிப்ரஷன் உள்ளவர்கள் பச்சை தண்ணீரில் குளிக்கும்போது மூன்று மாதங்களில் மன அழுத்தம் குறையும் என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. சொரியாசிஸ் போன்ற தோல் நோய் உள்ளவர்கள் சுடு தண்ணீரை தவிர்த்து பச்சைத் தண்ணீரில் குளித்தால் அதன் தாக்கம் குறைக்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us