ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்
ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், தக்காளி - 2, கேரட் - 1, கத்தரிக்காய் - 1, உருளைக் கிழங்கு - 1, பச்சை மிளகாய் - 8, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - ஒரு டீ ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன், பெருங்காயத் தூள் - அரை டீ ஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, கொத்தமல்லி இலை- சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பு - தலா ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் - கால் டீ ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
இட்லி சாம்பார் செய்முறை :
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளுங்கள். கேரட், உருளைக் கிழங்கு, கத்தரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.
துவரம்பருப்பு, பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க கொடுப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி விடவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சுவையான டிபன் சாம்பார் ரெடி.