/indian-express-tamil/media/media_files/2025/10/07/download-2025-10-07t190-2025-10-07-19-08-45.jpg)
தக்காளி என்பது நம் அன்றாட உணவில் இடம் பிடித்திருக்கும் ஒரு முக்கியமான காய்கறியாகும். இதில் வைட்டமின் எ, சி, கே மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இவை நம்மை நோயாளிகளாக மாறுவதிலிருந்து பாதுகாக்கும். தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற இயற்கை பிக்மெண்ட் ஹார்ட் நோய்கள் மற்றும் சில வகை புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. இது நம் செல்களைக் காக்கும் திறன் பெற்றது.
தக்காளி ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்கிறது. சரும அழகுக்கும் இது ஒரு சிறந்த உணவாகும், காரணம் இதில் உள்ள வைட்டமின் C. மேலும் தக்காளி கண்ணின் சுகாதாரத்திற்கும், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க சிறந்தது. குறைந்த கலோரி கொண்டது என்பதால், உடல் எடையை கட்டுப்படுத்த விரும்பும் நபர்கள் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்படி பட்ட தக்காளி கேட்டு போய்விட்டாள் அதை குப்பையில் வீசாமல் அதை எப்படி வேறொரு விஷயத்திற்கு பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
சிம்பிள் டிப் இதோ!
முதலில் தாக்க்களி கெட்டு போய்விட்டால் அதை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. ஆனால் அதை பித்தளை பாத்திரங்கள் அல்லது பூஜை பாத்திரங்களை பளீச்சென்று ஆக்குவதற்கு இதை பயன்படுத்தலாம்.
முதலில் இந்த தக்காளியை ஒரு பவுல் தண்ணீர் சேர்த்து அதில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அதனை பிரீசெரில் கொஞ்சம் நேரம் வைக்க வேண்டும். இப்போது கொஞ்சம் நேரம் கழித்து அதை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து அதில் தண்ணீர் சேர்த்து, அதனுடன் கொஞ்சம் வினிகரும் சேர்த்து அந்த கரைசலை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பித்தளை பாத்திரத்தை சுத்தம் செய்ய பயனப்டுத்தலாம்.
முடிவாக...
தக்காளி ஒரு சக்திவாய்ந்த, பல நன்மைகள் கொண்ட இயற்கை மருந்து போன்ற காய்கறி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தினமும் உணவில் தக்காளியைச் சேர்ப்பது உடல்நலத்திற்கு மிகுந்த பலன்களை அளிக்கும், அனால் அது கெட்டு போய்விட்டால் அதை கீழே தூக்கி போடாமல் இந்த மாதிரி பயன்படுத்தி பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.