* 1 டீஸ்பூன் தக்காளி கூழுடன், 1 டேபிள் ஸ்பூன் நல்ல பதமான தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், முகத்தில் உள்ள கருமை மறைவதை நன்கு காணலாம்.
* நன்கு கனிந்த தக்காளியை அரைத்து, அத்துடன் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் நன்கு காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை தேய்த்து கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் கருமை நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
* 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழுடன், 1/2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்பு அதனை முகச் சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், முகம் பொலிவோடு இருப்பதைக் காணலாம்.
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறுடன் 1 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை போட நல்ல பலன் கிடைக்கும்.
* ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டீஸ்பூன் தக்காளி கூழ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் நீங்கா கருமையும் நீங்கிவிடும்.