சுவையான மணமணக்கும் தக்காளி ரசம்: இப்படி செய்யுங்க!

சுவையான மணமணக்கும் தக்காளி ரசம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சுவையான மணமணக்கும் தக்காளி ரசம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hotel rasam recipe milagu rasam in tamil

hotel rasam recipe milagu rasam in tamil

தென்னிந்தியாவில் எந்த விருந்து ரசம் இல்லாமல் நிறைவடைவது இல்லை. மிகவும் எளிமையான உணவு வகையாகவும் ரசம் கருதப்படுகிறது. ரசம் செய்வது மிகவும் எளிமையானது. மிளகு ரசம், புளி ரசம், இஞ்சி ரசம், தக்காளி ரசம் என ரசத்தில் பல வகையில் உள்ளன. இதில் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ரசம் தக்காளி ரசம். தக்காளி ரசம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

தக்காளி ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

Advertisment

தக்காளி ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள் கீழே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான அளவு நல்ல தக்காளியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பருப்பு வேக வைத்த தண்ணீர் - 1/4 கப் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிளகு - 1 டீஸ்பூன், வரமிளகாய் - 4, பூண்டு - 6 பற்கள், சீரகம் - 1/2 டீஸ்பூன், மல்லி - 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு, சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு எடுத்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி?

விரைவாக தக்காளி ரசம் செய்வது ரொம்ப எளிமையானது. அதனால், சுவையான மணமணக்கும் தக்காளி ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Advertisment
Advertisements

முதலில் தக்காளியை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைக்கவும். அதில் வரமிளகாயை போட்டு 1 நிமிடம் வறுக்கவும். பின்னர், புளியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், வறுத்த வரமிளகாயுடன் மிளகு, பூண்டு, சீரகம், மல்லி சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சமையல் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர், அதில் புளிச்சாறு, உப்பு சேர்த்து, அத்துடன் பருப்பு வேக வைத்த தண்ணீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, கொத்தமல்லி தூவி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக பெருங்காயத்தூளைத் தூவினால் சுவையான மணமணக்கும் தக்காளி ரசம் தயார்.

இந்த தக்காளி ரசத்தை சோற்றில் ஊற்றி சாப்பிடலாம் அல்லது சூப்பு போலவும் குடிக்கலாம்.

குறிப்பு: தக்காளி ரசத்திற்கு புளியை குறைவாகவும் தக்காளியை அதிகமாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தக்காளி ரசம் நன்றாக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Lifestyle Food Kitchen

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: