தீபாவளிக்கு உங்க வீடு ஜொலிக்கும்... இப்படி அலங்காரம் அமைச்சுப் பாருங்க!

தீபாவளிக்கு உங்கள் வீட்டை எப்படி ஜெலிக்க வைக்கலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

தீபாவளிக்கு உங்கள் வீட்டை எப்படி ஜெலிக்க வைக்கலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
diwali

பண்டிகை என்றாலே எப்போதும் வீட்டில் கொண்டாட்டமாக இருக்கும். அதிலும், தீபாவளி என்றால் இரட்டிப்பு சந்தோஷத்துடன் இருப்போம். புத்தாடைகள், வண்ண வண்ண வான வேடிக்கை, ஒளி தரும் விளக்குகள் என தீபாவளி களைகட்டும்.  தீபாவளி அன்று காலையில் எழுந்து தலையில் நல்லெண்ணெய் வைத்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து கொண்டு இறவனை தொழுவதை தமிழர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

Advertisment

பின்னர், காலை உணவு, மதிய உணவு என ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு முறை பின்பற்றப்படும். சிலர் நோம்பிருந்து தீபாவளியை கொண்டாடுவார்கள். அதுமட்டுமல்லாமல், தீபாவளி அன்று தான் உறவுகள் எல்லாம் ஒன்று கூடுவார்கள். பெரும்பாலும் தொலை தூரத்தில் இருப்பவர்கள் தீபாவளி பண்டிகை அன்று எப்படியாவது சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள். தன் குடும்பத்துடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவார்கள். குடும்பத்தில் சந்தோஷத்தை கொண்டு வரும் தீபாவளி அன்று வீட்டை எப்படி அலங்கரிக்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அகல் விளக்குகள்

தீபாவளி என்றாலே ஒளி என்று தான் பொருள். அதாவது ஒளி நிறைந்த பண்டிகை எனவே ஒளிக்கு ஒளி சேர்க்கும் விதமாக களிமண்ணால் ஆன அகல் விளக்குகளை வண்ணமயமாக அலங்கரித்து வீட்டில் வரிசையாக ஏற்றி வைக்கலாம். இதன்  மூலம் வீடு முழுவதும் ஒளியால் நிறையும்.

வண்ண கோலங்கள்

தீபாவளிக்கு வாசலை அலங்கரிக்க வண்ணமயமான ரங்கோலி கோலங்களை போடலாம். வண்ணப்பொடிகள் அல்லது பூவிதழ்களின் மூலம் இதை செய்யலாம். வீட்டின் வாசலை ரங்கோலியால் அலங்கரித்து நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் வரவேற்கலாம்.

Advertisment
Advertisements

எல்.இ.டி விளக்குகள்

வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் போன்ற இடங்களில் எல்.இ.டி விளக்குகளை தொங்கவிடலாம். இது பண்டிகை கால உணர்வை தரும்.

மலர் அலங்காரம்

வீட்டை அழகாக காட்சிப்படுத்துவதற்கு மலர் அலங்காரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு ரோஜா மற்றும் சாமந்தி பூவை பயன்படுத்தலாம். பூக்களில் மாலை செய்து வாசல், பால்கனி மற்றும் பூஜையறையை அலங்கரிக்கலாம்.

மாவிலை தோரணம்

மாவிலை தோரணம் தீபாவளிக்கு பூஜை அறையை அலங்கரிக்க மிக முக்கியமாகும். மாவிலை தோரணம், மணிகளால் செய்யப்பட்ட தோரணம், கதவு தொங்கல்களை பயன்படுத்துவது நல்ல உணர்வை தரும்.

மலர் அலங்காரம்

தாமரை உருளிகளில் தண்ணீரை நிரப்பி மலர்கள் மற்றும் மிதக்கும் மெழுகுவர்த்தியை ஏற்றி வீடின் வாசல் அருகில் வைப்பது ஒரு நல்ல வரவேற்பாக இருக்கும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: