கரப்பான் பூச்சியை ஓட ஓட விரட்டும்... மாத்திரையை இப்படி யூஸ் பண்ணுங்க!

கரப்பான் பூச்சி மற்றும் பல்லி தொல்லைக்கு வீட்டில் எளிய தீர்வு உள்ளது. ஒரு காலாவதியான மாத்திரையும் மிளகும் போதுமானது. இது எப்படி வேலை செய்யும் என்பதை பார்க்கலாம்.

கரப்பான் பூச்சி மற்றும் பல்லி தொல்லைக்கு வீட்டில் எளிய தீர்வு உள்ளது. ஒரு காலாவதியான மாத்திரையும் மிளகும் போதுமானது. இது எப்படி வேலை செய்யும் என்பதை பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
lizard cockroaches

வீட்டுக்குள் கரப்பான் பூச்சி மற்றும் பல்லி வந்து தொல்லையாக்குவது பலருக்கும் பொது சிக்கலாகவே உள்ளது. உணவறை, குளியலறை, மற்றும் மற்ற பகுதிகளில் இவை அடிக்கடி காணப்படுவதால் எதையும் தொட அச்சம், சுகாதாரப் பிரச்சனைகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய பூச்சிகளை விரட்டும்போது பெரும்பாலானவர்கள் கடைகளில் கிடைக்கும் ஸ்பிரே மற்றும் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

Advertisment

ஆனால் இந்த ஸ்பிரேக்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் மிகவும் ஆபத்தானவை. கெமிக்கல்களின் வாசனை சிலருக்கு சுவாச சிரமம், மூச்சுத் திணறல், தலைவலி, அலர்ஜி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் இந்த தயாரிப்புகளை அடிக்கடி வாங்க வேண்டியிருப்பதால் அதிகமாக பணமும் செலவாகிறது.

இத்தகைய பிரச்சனைகளுக்கு மாற்றாக, வீட்டில் கிடைக்கும் சாதாரண பொருட்கள் மூலம் இந்த பூச்சிகளின் தொல்லையை தவிர்க்க முடியும் என்ற ஒரு பயனுள்ள டிப்ஸை "ட்ரெண்டிங் சமையல்" என்ற யூடியூப் சேனல் பகிர்ந்துள்ளது.

அதன்படி, வீட்டில் உள்ள ஒரு காலாவதியான மாத்திரை (உதாரணமாக – சில மூட்டு வலி மாத்திரைகள், அல்லது பைராசிட்டமால் போன்றவை) மற்றும் மிளகு பூண்டு இருந்தாலே போதும். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட முறையில் பயன்படுத்தினால், அதன் வாசனையால் கரப்பான் பூச்சியும் பல்லியும் அந்த இடத்திலிருந்து விலகத் தொடங்கும்.

Advertisment
Advertisements

செய்முறை

முதலில் ஒரு மிக்சி ஜாரில் 3 பூண்டு, 4 சின்ன வெங்காயம், கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து அதனுடன் காலாவதியான மாத்திரை எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது ஒரு பூச்சி உருண்டை ஒன்று எடுத்து அதனுடன் இந்த முதல் கலவையை சேர்த்து கலக்க வேண்டும். இந்த மொத்த கலவையை கொஞ்சம் கபோர்ட் சேர்த்து கலக்கவும் வாசனைக்காக. இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து வீட்டில் உள்ள மூலை முடுக்கில் எல்லாம் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இந்த தண்ணீரை வைத்து உங்கள் வீட்டு சுவற்றில் மோப்ப செய்து கூட பயன்படுத்தலாம்.

இதனை அடிக்கடி செய்து பாருங்கள், உங்கள் வீட்டில் கரப்பான் பள்ளி என்று எந்த தொல்லையும் இருக்காது. வீடும் நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருக்கும். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: