வெற்றிலைக் கொடி வளர்க்க ஆசையா? இனி நர்சரி வேண்டாம்! ஒரே கட்டிங்கில் வீட்டிலேயே பந்தல் போடலாம் - சூப்பர் டிப்ஸ்!

வீட்டிலேயே பசுமையான வெற்றிலைக் கொடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? நர்சரியில் வாங்கி வரும் செடிகள் சீக்கிரமே பட்டுப்போய்விடுகின்றனவா? இனி கவலை வேண்டாம்! வெறும் ஒரு சின்ன வெற்றிலைக் கட்டிங்கை வைத்து, மிக ஆரோக்கியமான வெற்றிலைக் கொடியை நீங்களே வீட்டிலேயே வளர்க்க முடியும்.

வீட்டிலேயே பசுமையான வெற்றிலைக் கொடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? நர்சரியில் வாங்கி வரும் செடிகள் சீக்கிரமே பட்டுப்போய்விடுகின்றனவா? இனி கவலை வேண்டாம்! வெறும் ஒரு சின்ன வெற்றிலைக் கட்டிங்கை வைத்து, மிக ஆரோக்கியமான வெற்றிலைக் கொடியை நீங்களே வீட்டிலேயே வளர்க்க முடியும்.

author-image
WebDesk
New Update
betel 2

ஒரேயொரு கட்டிங்கில் இருந்து எப்படி பல செடிகளை உருவாக்கலாம் என்று வாங்க பார்க்கலாம். Photograph: (Freepik)

வீட்டிலேயே பசுமையான வெற்றிலைக் கொடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? நர்சரியில் வாங்கி வரும் செடிகள் சீக்கிரமே பட்டுப்போய்விடுகின்றனவா? இனி கவலை வேண்டாம்! வெறும் ஒரு சின்ன வெற்றிலைக் கட்டிங்கை வைத்து, மிக ஆரோக்கியமான வெற்றிலைக் கொடியை நீங்களே வீட்டிலேயே வளர்க்க முடியும். ஒரேயொரு கட்டிங்கில் இருந்து எப்படி பல செடிகளை உருவாக்கலாம் என்று வாங்க பார்க்கலாம்!

Advertisment

வெற்றிலை என்பது வழிபாட்டுக்கும், மருத்துவ குணங்களுக்கும் உரிய ஒரு புனித தாவரம். மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் வெற்றிலையை வீட்டில் வளர்ப்பது குறித்து இரண்டு விதமான கருத்துகள் நிலவினாலும், வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு செடி வளராதது, வேர் பட்டுப்போவது போன்ற பல சிக்கல்கள் இருக்கும். இனி இந்த சிக்கல்களையெல்லாம் கடந்து, வீட்டில் பந்தல் போல வெற்றிலைக் கொடியை எப்படி வளர்க்கலாம் என்று பார்ப்போம்.

வெற்றிலைக் கொடியின் குணம்:

வெற்றிலைக் கொடி மிகவும் புனிதமானதும், மருத்துவக் குணம் நிறைந்ததுமான தாவரம் என்பதால், இதை மிக சுத்தமான, நிழலான இடத்தில் வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்கும்போது, கொடி செழிப்பாக வளர்வதோடு, இலைகளும் அகலமாகவும், பெரியதாகவும் படர்ந்து வரும்.

Advertisment
Advertisements

வெற்றிலைக் கட்டிங் வைத்து பதியம் போடுவது எப்படி?

நர்சரியில் வாங்கும் வெற்றிலை செடிகள் சில சமயம் வேர் அழுகி, சில நாட்களிலேயே காய்ந்து போய்விடும். இதற்கு பயப்பட வேண்டாம். ஒரு 5-6 இன்ச் நீளமுள்ள வெற்றிலைக் கட்டிங், அதாவது ஒரு இலை மற்றும் 2-3 இன்ச் அளவு தண்டு இருந்தாலே போதும். நீங்களே புதிய செடியை உருவாக்கி விடலாம்.

மண்ணைத் தேர்ந்தெடுங்கள்!

ஒரு சிறிய தொட்டியில், தென்னை நார்க் கழிவு (coco-peat), தோட்ட மண் மற்றும் மண்புழு உரம் (vermi-compost) ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த மண் கலவைக்குள் காற்று நன்றாகச் சென்று வேர்கள் சுவாசிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

நடவு செய்யுங்கள்!

வெற்றிலைக் கட்டிங்கைத் தேர்ந்தெடுத்த மண் கலவையில் நட்டு, சுற்றிலும் மண்ணை நிரப்பவும். முக்கியமாக, டை அம்மோனியம் பாஸ்பேட் (DAP) உரத்தை 10-15 உருண்டைகள் மட்டும் செடியின் வேரை ஒட்டாமல், சுற்றிலும் போட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றுங்கள்.

செடியை கவர் செய்யுங்கள்!

தண்ணீர் ஊற்றிய பிறகு, தொட்டியில் செடி மூழ்கும் வரை ஒரு பிளாஸ்டிக் கவரால் மூடிவிடுங்கள். கவரின் அடிப்பாகத்தை ஒரு ரப்பர் பேண்ட் அல்லது நூலால் கட்டிவிடுங்கள்.

எத்தனை நாட்கள் வைத்திருக்க வேண்டும்?

கவர் செய்த தொட்டியை வெளிச்சம் படாத, இருட்டான இடத்தில் வைத்து விடுங்கள். 15-20 நாட்கள் கழித்து எடுத்து, கவரைப் பிரித்துப் பார்த்தால், வெற்றிலைக் கட்டிங்கில் நிறைய வேர்கள் பிடித்து நன்றாக வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த ஒரு கட்டிங்கையே இரண்டு துண்டுகளாக வெட்டி, மேலும் இரண்டு செடிகளை உருவாக்க முடியும்! இப்படி ஒற்றை வெற்றிலைக் கட்டிங்கில் இருந்து பல வெற்றிலை செடிகளை உருவாக்கலாம். இவற்றை வெவ்வேறு தொட்டிகளில் மாற்றி வளர்க்க வேண்டியது தான்.

உரம் கொடுப்பது எப்படி?

மாதத்திற்கு ஒருமுறை தொழு உரம் கொடுத்தாலே போதும். அதேபோல், மாதத்திற்கு ஒரு முறை, 10-15 உருண்டைகளுக்கு மிகாமல் டை அம்மோனியம் பாஸ்பேட் உரத்தைச் செடிகளைச் சுற்றிலும் போட்டு தண்ணீர் ஊற்றுங்கள். மிக முக்கியமாக, வேர்ப்பகுதியில் போடாமல், ஓரங்களில் மட்டும் போட வேண்டும். இல்லையெனில் வேர்கள் கருகிவிடும்.

தண்ணீர் விடுவது:

வெற்றிலைக் கொடிகள் நிழலான இடங்களில் செழித்து வளரும். அதனால் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.

இனி கவலையில்லை!

மேற்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, ஒரு சின்ன வெற்றிலைக் கட்டிங்கில் இருந்தே பெரிய, பந்தல் போட்ட வெற்றிலைக் கொடிகளை உருவாக்க முடியும். அதனால், இனி நர்சரியில் வாங்கிய செடிகள் பட்டுப் போகின்றன என்று நீங்கள் வருத்தப்படத் தேவையில்லை! வீட்டிலேயே பசுமையான வெற்றிலைத் தோட்டம் அமைத்து மகிழுங்கள்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: