Advertisment

'வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா' பளபள முகத்திற்கு சுலப வழிகள்

எது அழகு? என்ற புரிதலில் நமக்கு சிக்கல் உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா' பளபள முகத்திற்கு சுலப வழிகள்

இந்த Inferiority Complex என்பது பெரும்பாலும் 'நாம் பார்க்க அழகாக இல்லையே' என்று நினைப்பதால் ஏற்படுவது தான். இதன் காரணமாகவே திறமை இருந்தும், புத்திசாலித்தனம் இருந்தும் முகத்தைக் கூட நேருக்கு நேர் பார்த்து சிலர் பேச மாட்டார்கள்.

Advertisment

நாம் அழகாக இல்லை என்று நினைத்து விடுவார்களோ, நம்மை அசிங்கமாக நினைத்து விடுவார்களோ, நாம் சிரித்தால் கிண்டல் செய்வார்களோ என்று நினைத்து அவர்களே அவர்களை ஏமாற்றிக் கொள்வார்கள்.

இதனால் தற்கொலைகள் அடங்கேறிய சம்பவங்களும் உண்டு. நாம் அழகாக இருக்கிறோம் என்று நம்பினால் தான் நம்மால் கான்ஃபிடன்ட்டாக உருமாற முடியும். அப்பொழுது தான் நம்மால் சாதிக்க முடியும். இது சைக்காலஜி.

ஆனால், எது அழகு? என்ற புரிதலில் நமக்கு சிக்கல் உள்ளது. 'வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா' என்பது போல், 'நல்ல சிகப்பாக இருப்பவர்கள் தான் அழகு' என்ற எதார்த்த பிழையில் இருந்து நாம் இன்னமும் மீளவில்லை. அப்படித் தான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

கருப்போ, சிகப்போ நாம் அனைவரும் அழகு தான்.

இருப்பினும் முகத்தை பொலிவுடனும், பளபளப்பாகவும் வைத்திருக்க நாம் மெனக்கெட்டால் அது தவறில்லை. முன்பே சொன்னது போல், நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கவே அது உதவுகிறது.

செலவின்றி, எளிதான முறையில் முகத்தை பொலிவுடனும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகம் மிருதுவாகும்.

சந்தனம், பால், கடலை மாவு, மஞ்சள் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் மாறும்.

தேங்காய்ப் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

பன்னீர், சந்தனம், உலர்ந்த ரோஜா இதழ்கள் மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், தோலின் நிறம் பொலிவு பெறும்.

வேப்பிலை, துளசி மற்றும் புதினா இலைகளை சமமாக எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு தேக்கரண்டி எடுத்து பன்னீருடன் சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

வெயிலால் சருமத்தின் புத்துணர்ச்சி குறையும். அப்போது பாலில் ரோஜா இதழ்களை சிறிது நேரம் ஊற வைத்து அதை முகத்தில் தடவி கழுதி வந்தால் புதுப்பொலிவு ஏற்படும்.

ஒரு தேக்கரண்டி துளசி இலைச் சாற்றுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாக மாறும்.

தன்னம்பிக்கையுடன் செயல்படுங்க... ஆல் தி பெஸ்ட்!

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment