/indian-express-tamil/media/media_files/2025/06/02/sCF6qYkrCabhBBXQYa2c.jpg)
4 நாள் ஆனாலும் மல்லிகைப் 'பூ' வாடாது... அதுக்கு வெள்ளை துணியை இப்படி யூஸ் செய்யுங்க!
ஃபிரிட்ஜ் இல்லாமல் மல்லிகை பூக்களை வாடாமல் ஒரு சில நாட்களுக்குப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து enaku piditha samayal என்ற யூடியூப் சேனல் சில எளிய வழிமுறைகளை விளக்கியுள்ளது. பூக்களின் புத்துணர்ச்சியை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ள உதவும் இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம், 3 முதல் 4 நாட்களுக்குப் பூக்களைப் பாதுகாக்க முடியும்.
தேவையான பொருட்கள்
மல்லிகை பூக்கள், ஒரு வெள்ளை அல்லது மெல்லிய துணி, ஒரு அகலமான பாத்திரம், ஒரு சிறிய தட்டு
செய்முறை
முதலில், ஒரு வெள்ளை அல்லது மெல்லிய துணியை எடுத்து, தண்ணீரில் நன்றாக நனைத்துப் பிழிந்து கொள்ள வேண்டும். மல்லிகை பூக்களை வட்ட வடிவில் சுருட்டி, ஈரமான துணியின் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, துணியை பூக்களின் மீது மூடி, ஒரு சிறிய முடிச்சு போல கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதன் நடுவில் ஒரு சிறிய தட்டை வைக்க வேண்டும். கட்டி வைத்த பூக்களை அந்தத் தட்டின் மீது வைத்து, பாத்திரத்தை வெயில் படாத அல்லது ஃபேன் காற்று இல்லாத இடத்தில் வைக்க வேண்டும்.
முக்கிய குறிப்புகள்
பூ வாங்கும்போதே, மொட்டுகளாக வாங்கி, வந்தவுடன் கட்டி வைப்பது நல்லது. செடியிலிருந்து பறிக்கப்பட்ட பூக்களை, மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்குள் கட்டி வைக்க வேண்டும். இந்த முறையில் பூக்களை ஒரு வாரம் வரை பாதுகாக்க முடியாது, ஆனால் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம். அவ்வப்போது, பூக்களின் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்து விட வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்தால் மல்லிகை பூக்களின் வாசனை வரவில்லை என்று நினைப்பவர்களும் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.