2 வாரம் ஆனாலும் தக்காளி அழுகிப் போகாது... டேப்பு போட்டு இப்படி ஒட்டி வச்சுப் பாருங்க!

சிலர் நேரடியாக தக்காளியை தோலுக்கு பயன்படுத்தியும் இதன் நன்மைகளை அனுபவிக்கிறார்கள். விட்டமின் ஏ, லூட்டீன் மற்றும் ஜீக்சான்தின் போன்ற கண்களுக்கு பயனுள்ள சத்துக்கள் தக்காளியில் உள்ளது.

சிலர் நேரடியாக தக்காளியை தோலுக்கு பயன்படுத்தியும் இதன் நன்மைகளை அனுபவிக்கிறார்கள். விட்டமின் ஏ, லூட்டீன் மற்றும் ஜீக்சான்தின் போன்ற கண்களுக்கு பயனுள்ள சத்துக்கள் தக்காளியில் உள்ளது.

author-image
Mona Pachake
New Update
download (100)

தக்காளி என்பது நம் அன்றாட வாழ்க்கையில் வழக்கமாக பயன்படுத்தப்படும் பழக்காயாக இருப்பினும், அதில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகள் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவை. சாம்பார், ரசம், சட்னி, குழம்பு, கறி, சாலட் என எந்த வகை உணவிலும் தக்காளி தவிர்க்க முடியாத சேர்க்கையாக உள்ளது. இது சுவையை மட்டுமல்லாமல், உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது.

Advertisment

தக்காளியில் அதிக அளவில் லைகோபீன் எனும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடெண்ட் உள்ளது. இது ஒரு ரத்த சிவப்புப் பொருள் போல தோன்றும் பிக்மெண்ட். இதன் முக்கிய வேலை இதயத்தைப் பாதுகாக்கும் செயல்பாடாகும். லைகோபீன் இரத்த அழுத்தத்தை சமமாக வைத்திருக்க உதவுவதால், இதய நலனுக்குப் பெரிதும் உதவுகிறது. இது மட்டுமல்லாமல், புற்றுநோய்க்கு எதிரான ஒரு இயற்கை பாதுகாப்பும் தக்காளியின் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக, தக்காளி சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கு சிறுநீரக, குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய்களின் அபாயம் குறைவாக இருக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Tomato

தோல் மற்றும் முக அழகிற்கும் தக்காளி ஒரு அற்புதமான இயற்கை தீர்வாக செயல்படுகிறது. இதில் அதிக அளவு விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட்கள் இருப்பதால், தோலின் ஒளிர்வை அதிகரித்து, முகப்பருக்கள், கருமைபட்சை மற்றும் உலர்ச்சி போன்ற பிரச்சனைகளை குறைக்கும். சிலர் நேரடியாக தக்காளியை தோலுக்கு பயன்படுத்தியும் இதன் நன்மைகளை அனுபவிக்கிறார்கள். விட்டமின் ஏ, லூட்டீன் மற்றும் ஜீக்சான்தின் போன்ற கண்களுக்கு பயனுள்ள சத்துக்கள் தக்காளியில் அதிகமாக உள்ளதால், இது பார்வைத் திறனை மேம்படுத்தி, வயதால் ஏற்படும் கண் குறைகள் மற்றும் ரெடினா பாதிப்புகளைத் தடுக்கும்.

ஒரு சிம்பிள் டிப்!

இவ்வளவு சத்துள்ள தக்காளி நம் வீடுகளில் அதிகம் வாங்கி ஸ்டோர் செய்து வைப்பது வழக்கம் தான். ஆனால் அதை கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் வைத்திருப்பதற்கு இந்த டிப் யூஸ் பண்ணுங்க. 

Advertisment
Advertisements

istockphoto-1199993239-612x612

தக்காளியின் காம்பு பகுதியிலிருந்து அதன் ஈரப்பதம் அனைத்தும் வெளியேரி சீக்கிரம் அது கேட்டு போவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒரு செல்லோடேப் எடுத்து ஒரு சிறிய துண்டை வெட்டி அந்த காம்பு பகுதியை மறைத்து ஓட்ட வேண்டும். இது கண்டிப்பாக 2 வாரங்களுக்கு மேல் நன்றாக வைத்திருக்க உதவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: