நல்ல விஷயங்களை பச்சரிசி இல்லாமல் செய்வதில்லை என பலரும் கூறுவார்கள். பெரியவர்கள் வாழ்த்தும் போது கூட, பச்சரிசியில் மஞ்சள் கலந்து ஆசீர்வாதம் செய்வார்கள். முன்னர் பச்சரிசி மாவில் தான் கோலம் போடுவார்கள். எனவே, பச்சரிசி மாவு கோலம் நம் பாரம்பரியத்தில் ஒன்றாக கலந்து விட்டது. அடுத்த தலைமுறைக்கும் பச்சரிசி மாவு கோலமிட சொல்லிக் கொடுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
அதன்படி, பச்சரிசி கொண்டு கோல மாவு எப்படி செய்யலாம் என பார்க்கலாம். முதலில் பச்சரிசி மாவை ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிது தண்ணீர், எலுமிச்சை சாறு, கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
இவ்வாறு செய்து எடுத்தால் பச்சரிசி கோலமாவு தயாராகி விடும். இதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“