/indian-express-tamil/media/media_files/2025/04/28/Jkf16JJR4a3VWef218pS.jpg)
பூஜைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் முதன்மையான இடத்தை பெறுவது குங்குமம். பூஜை நேரங்களை தவிர தினசரி பயன்பாட்டிலும் குங்குமம் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் இதை அதிகமாக பயன்படுத்தினாலும், கணிசமான அளவில் ஆண்களும் இதை உபயோகப்படுத்துகின்றனர்.
எனினும், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் குங்குமத்தை சருமத்தில் பயன்படுத்தும் போது எந்த விதமான ஒவ்வாமையும் ஏற்படாது. ஆனால், இன்றைய சூழலில் குங்குமத்திலும் சில இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனை தடுப்பதற்காக வீட்டிலேயே எளிமையான முறையில் குங்குமத்தை நாம் தயாரிக்க முடியும். இதற்கு நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானதாக இருக்கும். அதற்கான செய்முறை விளக்கத்தை தற்போது காணலாம்.
மூன்று ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அரை ஸ்பூன் சுண்ணாம்பு ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். இவ்வாறு அரைக்கும் போது அந்தக் கலவை பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் மாறி இருக்கும்.
இத்துடன் சிறிதளவு நெய் சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைக்க வேண்டும். இந்த நிறம் கூடுதல் சிவப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சுண்ணாம்பை மீண்டும் ஒரு முறை சேர்த்து அரைக்கலாம்.
இவ்வாறு அரைத்தால் குங்குமம் தயாராகி விடும். வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்கள் மூலம் குங்கமத்தை நாமே தயாரித்துக் கொள்ள முடியும். எனவே, இனி கடைகளில் இருந்து குங்குமம் வாங்க வேண்டிய தேவை இருக்காது.
நன்றி - Nalini Manick Cooking Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.