அரிசியை எப்போதும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க... பூச்சி அண்டாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்!

அரிசியில் பூச்சி பிடிப்பதைத் தடுக்கவும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் சில எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

அரிசியில் பூச்சி பிடிப்பதைத் தடுக்கவும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் சில எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

author-image
Meenakshi Sundaram S
New Update
rice insects

அரிசியை எப்போதும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க... பூச்சி அண்டாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்!

வீட்டில் சமைக்க அரிசி எடுத்துப் பார்க்கும்போது, சின்னச் சின்ன பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருப்பது நம்மில் பலருக்கும் பெரும் தலைவலியாக இருக்கும். குறிப்பாக, மழைக்காலம் அல்லது அதிக ஈரப்பதம் உள்ள நாட்களில் இந்தப் பிரச்னை அதிகமாகும். அரிசியில் பூச்சி பிடிப்பதைத் தடுக்கவும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ள சில எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment

காய்ந்த மிளகாய்: இது பாரம்பரியமான மற்றும் மிகவும் பயனுள்ள முறை. அரிசி சேமித்து வைக்கும் டப்பாவில், 3-4 காய்ந்த மிளகாய்களை காம்பு நீக்காமல் அப்படியே போட்டு வைக்கலாம். காரமான மிளகாயின் வாசம் பூச்சிகளை அண்ட விடாது.

வேப்ப இலை: நன்கு காய்ந்த வேப்ப இலைகள் சிறந்த பூச்சி விரட்டி. சுத்தமான, காய்ந்த வேப்ப இலைகளை அரிசியுடன் கலந்து வைத்தால், பூச்சிகள் வராமல் நீண்ட நாட்களுக்கு அரிசியைப் பாதுகாக்கலாம்.

கிராம்பு: சமையலுக்குப் பயன்படுத்தும் கிராம்புகள் பூச்சிகளை விரட்டும் சக்தி கொண்டவை. சில கிராம்புகளை சிறிய துணியில் கட்டி அல்லது அப்படியே அரிசி டப்பாவில் போட்டு வைக்கலாம். இதன் காரமான வாடை பூச்சிகளை அண்ட விடாது.

Advertisment
Advertisements

சூரிய ஒளியில் உலர்த்துதல்: அரிசியை வாங்கியவுடன், சுத்தமான துணியில் மெல்லியதாகப் பரப்பி, லேசான சூரிய ஒளியில் (நேரடி வெயில் இல்லாமல்) சிறிது நேரம் உலர்த்தலாம். அரிசியில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, பூச்சிகள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கும். அதிக நேரம் வெயிலில் வைத்தால் அரிசி உடைந்துவிடும் கவனம் தேவை.

காற்று புகாத டப்பாக்கள்: அரிசியை எப்போதும் காற்று புகாத, இறுக்கமாக மூடக்கூடிய டப்பாக்களில் சேமிப்பது மிகவும் அவசியம். இது வெளியிலிருந்து பூச்சிகள் உள்ளே நுழைவதைத் தடுக்கும், அத்துடன் ஈரப்பதமும் சேராமல் பாதுகாக்கும்.

சுத்தமான சேமிப்பு இடம்: அரிசி டப்பாக்களை வைக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருக்க வேண்டும். ஈரப்பதம் பூச்சிகள் உருவாக ஒரு முக்கிய காரணமாகும். அத்துடன், அந்த இடத்தைச் சுற்றிலும் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

புதிய அரிசியுடன் பழையதை கலக்காதீர்: புதியதாக வாங்கும் அரிசியை, ஏற்கனவே வீட்டில் இருக்கும் பழைய அரிசியுடன் கலக்க வேண்டாம். பழைய அரிசியில் பூச்சிகள் அல்லது அவற்றின் முட்டைகள் இருந்தால், புதிய அரிசியும் பாதிக்கப்படலாம். முதலில் பழைய அரிசியைப் பயன்படுத்திய பிறகு, புதியதைச் சேமிக்கலாம்.

மஞ்சள் தூள்: அரிசி டப்பாவின் ஓரங்களில் அல்லது அடியில் சிறிதளவு மஞ்சள் தூளைத் தூவி வைப்பதும் பூச்சிகளைத் தடுக்கும் ஒரு எளிய வழியாகும். மஞ்சளில் உள்ள கிருமி நாசினி பண்புகள் பூச்சிகளை விரட்டும். நீங்கள் வாங்கும் அரிசியின் அளவு குறைவாக இருந்தால், அதை ஒரு காற்று புகாத கொள்கலனில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கலாம். குளிர்ச்சியான சூழல் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கும். இந்த எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் அரிசியை பூச்சித் தொல்லையிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளலாம். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: