இனி கை வலிக்கமால் முருங்கைக் கீரையை உருவலாம்... இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

முருங்கைக் கீரை உருவி எடுப்பதற்கு சிரமப்படுபவர்களுக்கு இங்கே மிகவும் ஒரு எளிதான டிப்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. ட்ரை பண்ணி பாருங்கள். விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

முருங்கைக் கீரை உருவி எடுப்பதற்கு சிரமப்படுபவர்களுக்கு இங்கே மிகவும் ஒரு எளிதான டிப்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. ட்ரை பண்ணி பாருங்கள். விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
download (42)

முருங்கைக் கீரை என்பது தமிழர் பாரம்பரிய உணவில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒரு சத்துமிக்க கீரை வகையாகும். இது மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். இதில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் புரதங்கள் உள்ளன. முருங்கைக் கீரை கண் பார்வையை மேம்படுத்துவதில், சக்தியை அதிகரிப்பதில் மற்றும் எலும்பு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

Advertisment

மேலும், இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கும், இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும் இது உதவுகிறது. முருங்கைக் கீரை காய்ச்சல்க் காலங்களில் உடல் நலத்தை காக்கும் ஒரு இயற்கையான மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் உடலை நோய்களுக்கு எதிராக பாதுகாக்கின்றன.

முடிவில், முருங்கைக் கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை எளிதில் பெற முடியும். குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை அனைவருக்கும் ஏற்ற மற்றும் ஆரோக்கியமான கீரையாக இது பரிந்துரைக்கப்படுகிறது. அனால் இதை உதிர்ப்பதில் நிறைய பேருக்கும் சிரமம் ஏற்படலாம். அதனால் அதை எப்படி சுலபமாக செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். 

முருங்கைக் கீரை சத்து நிறைந்தது. வாரத்தில் ஒருமுறை முருங்கைக் கீரை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது. என்றாலும், முருங்கைக் கீரையை உருவி எடுப்பது என்பது கொஞ்சம் கடினமான வேலைதான். அப்படி, முருங்கைக் கீரை உருவி எடுப்பதற்கு சிரமப்படுபவர்களுக்கு முருங்கைக் கீரையை உருவி எடுப்பதற்கு மிகவும் ஒரு எளிதான டிப்ஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

முதலில் ஒரு நியூஸ் பேப்பர் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கட்டு முருங்கைக் கீரையை அதில் வைத்து நன்றாக சுருட்டி இறுக்கி வைக்க வேண்டும். ஒரு 2 அல்லது 3 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு எடுத்து, முருங்கைக் கீரைக் கட்டை அப்படியே உதறுங்கள். அப்படி முருங்கைக் கீரைக் கட்டை உதறினால், அனைத்து கீரைகளும் கொட்டிவிடும். இப்போது சிரமமில்லாமல் முருங்கைக் கீரை உருவிவிடலாம்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: