நாம் உணவுகளை எளிதாக சாப்பிடுவது போல், அதனை சமைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. அப்படி இருந்திருந்தால், எலக்ட்ரிக் சாப்பர், ஃபுட் ப்ராசசர், ஏர் பிரையர் மற்றும் பல சாதனங்கள் புழக்கத்திற்கு வந்திருக்காது. சமைப்பதற்கு தேவையான பொருள்களை தயார் செய்வது கடினமான ஒன்றாகும். குறிப்பாக, காய்கறிகளை கட் செய்வது, , பழங்களை உரிப்பது போன்ற பணிகளுக்கு நீண்ட நேரம் ஆவதால் சமைப்பதற்குள் டையர்ட் ஆகிவடுவோம்.
அதன் காரணமாக தான், சமையலறையில் செலவிடும் நேரத்தை குறைத்திட பல எளிய கிச்சன் ஹேக்குகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில், மாதுளையை எளிதாக சாப்பிட உதவும் வழிமுறையை இச்செய்தி தொகுப்பில் காணலாம். சிறந்த அம்சம் என்னவென்றால், இதனை செய்திட எவ்வித ஆடம்பர சாதனங்கள் தேவையில்லை. ஒரு கத்தி மற்றும் ஒரு கிண்ணம் மட்டும் இருந்தாலே போதும்.
முதலில் க்ரவுன் ஷேப் உள்ள பழத்தின் டாப் லேயரை கூர்மையான கத்தியை வைத்து கட் செய்து, வெளியே எடுக்க வேண்டும். பின்னர் பழத்தின் உள்ளே வெள்ளை கோட்களில் பிரிந்து காணப்படும் பழ விதைகள் அடங்கிய செக்மன்ட்களை வெர்டிக்கலாக கட் செய்ய வேண்டும்.
பின்னர், கிண்ணத்தின் மேலே பழத்தை தலைகீழாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு செக்மன்டையும் தனியாக பிரித்துதெடுக்க வேண்டும். தொடர்ந்து, பழத்தின் மீது மர ஸ்பூனால் அடித்தால் போதும், அனைத்து விதைகளும் கிணணத்துக்குள் விழுந்துவிடும்.
தொடர்ந்து, விதைகளுடன் இருக்கும் ஒயிட் பார்டிக்கல்களை கையால் எடுக்கலாம் அல்லது கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றினால் அவை மட்டுமே மேலே மிதந்துவரும். பின்னர், எளிதாக எடுத்துவிடலாம்.
ஆப்பிள் அல்லது பேரிக்காய் போன்று மாதுளை பழத்தை சாப்பிட முடியாது. சாப்பிடும் முன் அதன் தோலை உரிக்க வேண்டும். ஆனால் அதனை ஆரஞ்சு பழம் போல உரித்திட முடியாது. அந்த பழத்தின் தடிமனான தோலுக்குள் நூற்றுக்கணக்கான சிறிய விதைகள் உள்ளன. அந்த மாதுளை விதைகள் அரில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வீடியோவில் சொல்லப்பட்டது போலவே, இந்த வழிமுறையை பின்பற்ற மாதுளை ஜூஸை எளிதாக தயாரித்துவிடலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil