New Update
/indian-express-tamil/media/media_files/O1loFn0GeqLF06vMS5AB.jpg)
Oil cooking hacks
Oil cooking hacks
வீட்டில் அடிக்கடி எண்ணெய்யில் பொரித்த உணவை சாப்பிடுவீர்களா? அப்படியானால் உணவை வறுத்த பிறகு, எண்ணெயில் கணிசமான அளவு எச்சம் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர் அதனால் அந்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல் அப்புறப்படுத்துவது உண்டு.
ஆனால், சோள மாவைப் பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் பயன்படுத்திய எண்ணெய்யில் உள்ள அனைத்து அசடுகளையும் எடுத்து விடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த வீடியோ பாருங்க
தேவையான பொருட்கள்
சோளமாவு
தண்ணீர்
செய்முறை
1 பகுதி சோள மாவு எடுத்துக் கொள்ளுங்கள்.
2 பங்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டையும் கலக்கவும்.
60-70 டிகிரி செல்சியஸ் எண்ணெயில் ஊற்றவும்.
மாவை வெளியே எடுக்கவும்.
சூடான எண்ணெயில் சோள மாவுக் கலவையைக் கொட்டி, மெதுவாகக் கிளறுவது, சோள மாவு எச்சத்தை உறிஞ்சுவதால் அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது.
குறிப்பு: எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், நீங்கள் முன்பு வறுத்த உணவு வகைகளைக் கருத்தில் கொள்வதும் முக்கியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.