ஃபிரிட்ஜ் வேண்டாம்; 4 நாட்கள் ஆனாலும் மல்லிகை பூ வாடாது; இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!

மல்லிகைப் பூ சீசனில், உங்கள் வீட்டில் வாங்கி வரும் மல்லிகைப் பூக்களை ஃபிரிட்ஜ் இல்லாமல் எப்படி ஸ்டோர் செய்ய வேண்டும் என்று ஒரு சூப்பரான டிப்ஸ் இங்கே தருகிறோம். 4 நாட்கள் ஆனாலும் மல்லிகை பூ வாடாது இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்கள்.

மல்லிகைப் பூ சீசனில், உங்கள் வீட்டில் வாங்கி வரும் மல்லிகைப் பூக்களை ஃபிரிட்ஜ் இல்லாமல் எப்படி ஸ்டோர் செய்ய வேண்டும் என்று ஒரு சூப்பரான டிப்ஸ் இங்கே தருகிறோம். 4 நாட்கள் ஆனாலும் மல்லிகை பூ வாடாது இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்கள்.

author-image
WebDesk
New Update
jasmine

மல்லிகைப் பூவை ஃபிரிட்ஜ் இல்லாமல், 4 நாட்கள் ஆனாலும் வாடாமல் இருக்கிற மாதிரி ஸ்டோர் செய்வது எப்படி என்று எனக்கு பிடித்த சமையல் (enaku piditha samayal) யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியிருக்கிறார்கள்.

மல்லிகைப் பூ சீசனில், உங்கள் வீட்டில் வாங்கி வரும் மல்லிகைப் பூக்களை ஃபிரிட்ஜ் இல்லாமல் எப்படி ஸ்டோர் செய்ய வேண்டும் என்று ஒரு சூப்பரான டிப்ஸ் இங்கே தருகிறோம். 4 நாட்கள் ஆனாலும் மல்லிகை பூ வாடாது இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்கள்.

Advertisment

மலர்களில் மல்லிகையின் வாசம் தனித்துவமானது. பெண்கள் பலருக்கும் மல்லிகைப் பூ மிகவும் பிடித்தமானதாக இருக்கும். வீட்டுக்கு மல்லிகைப் பூ வாங்கி வந்தால், அதை பலரும் ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைப்பார்கள். அப்படி ஸ்டோர் செய்து வைக்கும்போது, ஃபிரிட்ஜ் அதிகப்படியான கூலிங் ஆகும்போது, மல்லிகைப் பூ லேசாக அழுகியது போல ஆகிவிடும். பிறகு, வெளியே எடுத்து வைக்கும்போது சீக்கிரம் வாடத் தொடங்கிவிடும். சிலருக்கு, ஃபிரிட்ஜில் மல்லிகைப் பூ வைத்தால் அந்த வாசனை புடிக்காது. அதனால், சிலர் மல்லிகைப் பூவை ஃபிரிட்ஜ் இல்லாமல் அதே நேரத்தில், வாடாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள். 

அதனால், மல்லிகைப் பூவை ஃபிரிட்ஜ் இல்லாமல், 4 நாட்கள் ஆனாலும் வாடாமல் இருக்கிற மாதிரி ஸ்டோர் செய்வது எப்படி என்று எனக்கு பிடித்த சமையல் (enaku piditha samayal) யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியிருக்கிறார்கள். அதை அப்படியே உங்களுக்கு தருகிறோம். 

Advertisment
Advertisements

மல்லிகைப் பூவை ஃபிரிட்ஜ் இல்லாமல் ஸ்டோர் செய்வது எப்படி என்று பார்ப்போம். முதலில் ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதை தண்ணீரில் நனைத்து பிழிந்துகொள்ளுங்கள். அதே நேரத்தில், நீங்கள் மல்லிகைப் பூ வாங்கும்போது, மொட்டுப் பூக்களாக வாங்கி உடனே கட்டி வைத்துவிட வேண்டும். 

மல்லிகைப் பூவை நன்றாகக் கட்டிக்கொள்ளுங்கள். பிறகு, நனைத்த வெள்ளைத் துணியில் மல்லிகைப் பூவை ரவுண்ட் ஷேப்பில் சுற்றி வைத்து வெள்ளைத் துணியை மடித்து மூடிவிடுங்கள். 

ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பாத்திரத்திற்குள்ளே வைக்கிற மாதிரி ஒரு சின்ன தட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த தட்டில் வெள்ளைத் துணியில் மூடி வைத்த மல்லிகைப்பூவை வையுங்கள். அவ்வப்போது வெள்ளைத் துணி மீது தண்ணீர் தெளித்துக்கொள்ளுங்கள். இப்படி வைத்தால், மல்லிகைப் பூ 3-4 நாட்கள் ஆனாலும் வாடாமல் ஃபிரஷ்ஷாக இருக்கும். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: