/indian-express-tamil/media/media_files/2025/07/24/curry-leaves-2-2025-07-24-19-30-10.jpg)
கருவேப்பிலையை ஃபிரிட்ஜில் வைக்காமல் எப்படி வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமால் இருக்கும் என்ற ஒரு சூப்பரான டிப்சை ஒய்2கே சமையல் (Y2K Samayal) என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளனர். Photograph: (YouTube/ Y2K Samayal)
கருவேப்பிலையை ஃபிரிட்ஜில் வைத்தாலும் எப்படி பாதுகாப்பாக வைத்தாலும் 4 நாட்களுக்கு மேல் தாங்கவில்லையா கவலையே படாதீர்கள், கருவேப்பிலையை இப்படி ஸ்டோர் செய்து வைத்தால் நீண்ட நாள் வாடாமல் இருக்கும். அது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
உங்கள் வீட்டில் சாம்பாரோ, குழம்போ, வெஜ்ஜோ, நான்வெஜ்ஜோ எதுவாக இருந்தாலும் கருவேப்பிலை இல்லாமல் நிறைவடையாது என்பதுதான் உண்மை. அந்த கருவேப்பிலை சமையலில் பயன்படுத்தும்போது, வாடாமல் ஃபிரஷ்ஷாக இருக்க வேண்டும்.
ஆனால், கருவேப்பிலையை ஃபிரிட்ஜில் வைத்தாலும், 4 நாட்களில் அழுகி வாடிவிடும். அதற்கு பதிலாக கருவேப்பிலையை ஃபிரிட்ஜில் வைக்காமல் எப்படி வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமால் இருக்கும் என்ற ஒரு சூப்பரான டிப்சை ஒய்2கே சமையல் (Y2K Samayal) என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.
உங்கள் வீட்டில் உள்ள கருவேப்பிலை நீண்ட நாட்களுக்கு வாடாமல் ஃபிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? அப்படியென்றால், கருவேப்பிலையை வாங்கி வந்தவுடன் அதை தண்ணீரில் நன்றாக அலசுங்கள். அதை ஒரு காட்டன் துணியில் நன்றாக சுற்றி, அதை காற்று புகாத ஒரு கண்டெய்னரில் போட்டு ஸ்டோர் செய்து வைத்தால் போதும், கருவேப்பிலை நீண்ட நாட்கள் வாடாமல் அழுகாமல் ஃபிரஷ்ஷாக இருக்கும். இதை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.