சரம் சரமா மல்லிகை பூ கட்டலாம்… இந்த டிரிக் டிரை பண்ணுங்க!
பலருக்கு மல்லிகைப்பூ மாலை கட்டுவது ஒரு சவாலாகவே இருக்கும். சரோ செல்வாஸ் விலாக் யூடியூப் சேனலில் வழங்கிய இந்த எளிய டிப்ஸ் மூலம், நீங்களும் அழகிய மல்லிகைப்பூ மாலைகளை எளிதில் கட்டலாம். மல்லிகைப்பூ மாலை கட்டுவதற்கு முன், சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பலருக்கு மல்லிகைப்பூ மாலை கட்டுவது ஒரு சவாலாகவே இருக்கும். சரோ செல்வாஸ் விலாக் யூடியூப் சேனலில் வழங்கிய இந்த எளிய டிப்ஸ் மூலம், நீங்களும் அழகிய மல்லிகைப்பூ மாலைகளை எளிதில் கட்டலாம். மல்லிகைப்பூ மாலை கட்டுவதற்கு முன், சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சரம் சரமா மல்லிகை பூ கட்டலாம்… இந்த டிரிக் டிரை பண்ணுங்க!
மல்லிகைப் பூவின் மனம் வீசும் அழகும், அதன் பாரம்பரியமும் நம் கலாசாரத்தில் நீங்காத இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, அழகிய மல்லிகைப்பூ மாலைகளைக் கட்டி தலையில் சூடுவது அல்லது தெய்வங்களுக்கு அணிவிப்பது மனதுக்கு ஆனந்தத்தை தரும். ஆனால், பலருக்கு மல்லிகைப்பூ மாலை கட்டுவது ஒரு சவாலாகவே இருக்கும். சரோ செல்வாஸ் விலாக் யூடியூப் சேனலில் வழங்கிய இந்த எளிய டிப்ஸ் மூலம், நீங்களும் அழகிய மல்லிகைப்பூ மாலைகளை எளிதில் கட்டலாம். மல்லிகைப்பூ மாலை கட்டுவதற்கு முன், சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Advertisment
மல்லிகைப்பூவின் தேர்வு: நீங்கள் புதியதாகக் கற்றுக்கொள்பவராக இருந்தால், பெரிய மற்றும் நீளமான காம்புகள் கொண்ட மல்லிகைப் பூக்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது கட்டுவதற்கு எளிதாக இருக்கும். பூ வாங்கும்போதே சிலர் நூல் தருவார்கள். அப்படி இல்லையென்றால், தனியாக நூல் எடுத்துக்கொள்ளுங்கள். நூலை தண்ணீரில் நனைத்து வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இது பூக்கள் கட்டி முடிக்கும் வரை வாடாமல் இருக்கவும், வேகமாக மலர்ந்துவிடாமல் இருக்கவும் உதவும். ஒரு கிண்ணத்தில் நூலை தண்ணீரில் போட்டு வைத்திருக்க வேண்டும்.
மாலை கட்டும் முறை - விளக்கம்
நூலை பிடித்தல்: நூலை தண்ணீரில் நனைத்த பிறகு, உங்கள் நடுவிரல் அளவுக்கு நூலை விட்டு, மீதமுள்ள நூலை 3 விரல்களால் கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். இதுதான் நாம் பூ கட்டத் தொடங்கும் ஆரம்பப் புள்ளி. ஒரு பெரிய பூவை எடுத்து, அதன் தலைப்பகுதி மேலே பார்த்திருக்குமாறு நூலின் விளிம்பில் வையுங்கள். அதேபோல, மற்றொரு பெரிய பூவை எடுத்து, அதன் தலைப்பகுதி கீழே பார்த்திருக்குமாறு முதல் பூவுக்குக் கீழே வையுங்கள். கீழே வைக்கும் பூவின் காம்பு நீளமாக இருப்பது முக்கியம். 2 பூக்களுக்கும் நடுவில் சரியாக நூல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். நூலை கீழ்நோக்கி ஒரு சுத்து சுற்றி, பூக்களின் நடுவில் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். மிகவும் இறுக்க வேண்டாம்; பூக்கள் அறுபட வாய்ப்புள்ளது. உங்கள் வலது கையில் இருக்கும் நூலை 'X' வடிவில் கொண்டு வந்து, உங்கள் கையின் நடுவில் உள்ள பூக்களின் வட்டத்திற்குள் கொண்டு வாருங்கள். பின்னர் மெதுவாக இழுத்தால் அழகாக ஒரு முடிச்சு விழுந்துவிடும்.
Advertisment
Advertisements
4 அல்லது 5 ஜோடி பூக்கள் கட்டிய பிறகு, நீங்கள் கட்டிய பூக்களை ஒருமுறை கையிலேயே மெதுவாக சுற்றிவிடுங்கள். பின்னர் அடுத்த 4 பூக்களை கட்டுங்கள், மீண்டும் சுற்றிவிடுங்கள். இந்த முறை பூக்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல், மாலை போல அழகாக அமைய உதவும். பூக்கடைகளில் வாங்கும் மாலை போலத் தோற்றம் அளிக்கும்.
புதியதாக கற்றுக்கொள்பவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாகப் பழக வேண்டும். ஓரிரு நாட்களில் நீங்கள் வேகமாகவும், அழகாகவும் மல்லிகைப்பூ மாலைகளைக் கட்டத் தொடங்கிவிடுவீர்கள். இந்த எளிய டிப்ஸ் மூலம், இனி நீங்களும் உங்கள் வீட்டில் மல்லிகைப்பூ மாலைகளை அழகாகவும், எளிமையாகவும் கட்டி மகிழலாம். பூக்கடைகளில் வாங்குவதைப் போலவே, எந்த இடைவெளியும் இல்லாமல், மிக நேர்த்தியாக நீங்கள் கட்டிய மாலைகள் உங்கள் தலைக்கு அழகூட்டும். உங்கள் பூமாலை தயார்!