அனைவரது வீட்டிலும் இட்லி, தோசை, பணியாரம் செய்ய மாவு அரைத்து வைப்போம். கிரைண்டரில் மாவு அரைத்து பிரிட்ஜில் வைப்போம். அப்படி இருந்தும் மாவு சீக்கிரம் புளித்துவிடுகிறது எனப் பலர் நினைத்திருப்போம். புளித்த மாவில் இட்லி, தோசை சுட்டு சாப்பிடுவது சுவையாக இருக்காது. மாவு புளிக்காமல் இருக்க சில டிப்ஸ், ட்ரிக் உள்ளது. ஒரு வாரம் வரை மாவு புளிக்காமல் வைத்திருக்கலாம்.
முதலில், ஊற வைக்கக்கூடிய அரிசி, பருப்பு 3-4 மணி நேரத்திற்கு மேல் இருக்க கூடாது. ரொம்ப நேரம் தண்ணீரில் ஊறினால் மாவு சீக்கிரம் புளித்துவிடும். ஆகவே குறிப்பிட்ட நேரம் வரை ஊறவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
கிரைண்டரில் மாவு ஆட்டும் போது கிரைண்டர் சூடு ஆகும். அப்படி சூடாகும் போது மாவு சீக்கிரம் புளிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே ஐஸ் வாட்டர் ஊற்றி மாவு அரைப்பது நல்லது. அதேசமயம் உளுத்தம் பருப்பு சேர்த்து அரிசி ஆட்டும்போது, மாவை கையில் தள்ளிவிடக் கூடாது. ஒரு மர கரண்டி அல்லது சிலிக்கான் கரண்டியை பயன்படுத்தி தள்ளிவிடலாம். கை விட்டு தள்ளுவது மாவு சீக்கிரம் புளிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் உப்பு சேர்க்காமல் மாவை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வாழை இலை அல்லது வெற்றிலை
ஒரு சில்வர் மாவு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாத்திரத்தின் உள், அடிப்பக்கத்தில் வாழை இலையை வைக்க வேண்டும். வாழை இலை வைக்கும் போது, நாம் சாப்பிடக்கூடிய பகுதி மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்போது இலைக்கு மேலே புதிதாக அரைத்த மாவை ஊற்றி விடுங்கள். பாத்திரத்தில் மாவு ஊற்றிய பின்பு மாவுக்கு மேலே ஒரு வாழை இலையை கவிழ்த்தி வைத்து
பாத்திரத்தை மூடி பிரிஜில் வைத்து விடுங்கள்.
இப்படி செய்வது 15 நாட்கள் வரை மாவு புளிக்காமல் இருக்கும். இந்த மாவில் கட்டாயமாக உப்பு சேர்க்க கூடாது. சமைக்கும்போது தேவையான அளவு மாவை எடுத்து, அதில் உப்பு சேர்த்து பயன்படுத்தலாம். வாழை இலை இல்லை என்றால், வாழை இலைக்கு பதிலாக இரண்டு வெற்றிலையை கூட இப்படி பயன்படுத்தலாம். வெற்றிலையின் உள்பக்கம் மாவில் படும்படி வைக்க வேண்டும். இனிமேல் உங்கள் வீட்டில் இந்த ட்ரிக் பயன்படுத்தி பாருங்கள்.