இட்லி பாத்திரம் கருத்து இருக்கா? எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க… புதுசு போல் மாறும்!

உங்களுடைய கருகிய இட்லிப் பாத்திரத்தைப் புதுசு போல பளபளக்க வைக்கும் ஒரு சூப்பரான ரகசியத்தைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

உங்களுடைய கருகிய இட்லிப் பாத்திரத்தைப் புதுசு போல பளபளக்க வைக்கும் ஒரு சூப்பரான ரகசியத்தைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

author-image
WebDesk
New Update
Idli chatti clean

Idli pot cleaning

நம் வீடுகளின் காலை உணவை அலங்கரிக்கும் சுவையான இட்லியை செய்ய, இட்லிப் பாத்திரம் எவ்வளவு முக்கியம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் சில சமயங்களில், தொடர்ச்சியான உபயோகத்தினால் பாத்திரத்தின் அடியில் கறைகள் படிந்து கறுத்துவிடும். கருகிய பாத்திரத்தைக் கண்டால், "ஐயோ, இட்லிப் பாத்திரம் இப்படி ஆகிவிட்டதே!" என்று பலருக்கும் மன வருத்தம் ஏற்படும். இனி அந்த கவலை வேண்டாம்! உங்களுடைய கருகிய இட்லிப் பாத்திரத்தைப் புதுசு போல பளபளக்க வைக்கும் ஒரு சூப்பரான ரகசியத்தைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்!

Advertisment

முதலில் உங்கள் கருகிய இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கருப்பு படிந்திருக்கும் இடம் வரை தண்ணீர் ஊற்றவும். கறைகள் எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அதுவரை தண்ணீர் ஊற்றுவது அவசியம்.

இப்போது, பாத்திரத்தில் ஊற்றியிருக்கும் நீரில், அரை எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும். அடுப்பை பற்றவைத்து இதை சுமார் 5 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க விடவும்.

Advertisment
Advertisements

5 நிமிடங்கள் கழித்து நீங்கள் பார்க்கும்போது, கருகிப் போயிருந்த பகுதிகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து, உங்கள் இட்லிப் பாத்திரம் புதியது போல ஆகி இருப்பதை நீங்கள் காணலாம். 

இப்போது, பாத்திரத்தில் உள்ள தண்ணீரை கவனமாக ஊற்றிவிட்டு, பாத்திரம் சிறிது ஆறிய பிறகு, வழக்கமாக பாத்திரம் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஸ்கிரப்பரால் லேசாக தேய்த்து கழுவவும். அவ்வளவுதான்! உங்கள் இட்லிப் பாத்திரம் புதிதாக வாங்கியது போல மின்னும்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: