நாம் வீட்டில் அரைத்த தோசை மற்றும் இட்லி மாவி புளித்து விட்டால், அதை எப்படி சரி செய்து பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மாவு புளித்து விட்டால் சிலர் அதில் வெங்காயம் நறுக்கியத்தை வதக்கி சேர்ப்பார்கள். தொடர்ந்து அதை தோசை செய்து சாப்பிடலாம். மேலும் புளித்த மாவில், வெங்காயம், கேரட், தேங்காய் துருவல், உப்பு , மிளகு சேர்த்து சின்ன போண்டாவாக பொறித்து எடுக்கலாம்.
நாம் புளித்த மாவை எண்ணெய் பிசுக்கு அதிகம் உள்ள பாத்திரம், டைல்ஸ், பாத்ரூம் தரையை நாம் சுத்தம் செய்யலாம். இதில் நல்ல பாக்டீரியா இருப்பதால் சுத்தப்படுத்த உதவும்.
ஸ்டீல் சிங்க் உள்ளிட்டவைகளை கழுவி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிலையில் நாம் இதை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் கரைத்து செடிக்கு ஊற்றலாம். மேலும் மாட்டிற்கு கழநீர் தண்ணீரில் சேர்த்து ஊற்றலாம். இதுபோல் குழாயில் படிந்திருக்கும் உப்பு கறையை நீக்கலாம். ஸ்டீல் சிங்க் உள்ளிட்டவைகளை கழுவி பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஸ்கிரப் போல் முகத்தில் தேய்த்து நாம் முகம் கழுவலாம்.